பாகுபலி படத்தை இயக்கிய ராஜமௌலி, அடுத்ததாக இயக்கிய படம்தான் ஆர்.ஆர்.ஆர். இப்படம், 1,200 கோடி ரூபாய்க்கும் மேல் ஈட்டி வசூல் சாதனை படைத்ததாக சொல்லப்படுகிறது. குறிப்பாக, இப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை கொண்டது என்றே கூறலாம். அந்தவகையில், இப்பாடல் முதலில் கோல்டன் குளோப் விருதையும், பின்னர் மிக உயரிய ஆஸ்கார் விருதையும் வென்றது. இதையடுத்து, நாட்டு நாட்டு பாடல் உலகம் முழுவதும் தீயாகப் பரவி வருகிறது.
இப்படிப்பட்ட சூழலில், ஆஸ்கர் வென்ற ‘நாட்டு நாட்டு’ பாடலின் பீட்டுக்கு ஏற்ப ஒளிர்ந்த டெஸ்லா கார்களின் ஹெட்லைட்ஸ். இதற்கு, எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் ஹார்டினுடன் கமென்ட் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.