ஆளும் அ.தி.மு.க.வாக இருந்தாலும் சரி… வழக்கம்போல உளறிக்கொட்டிய ஸ்டாலின்: நெட்டிசன்கள் மரண கலாய்!

ஆளும் அ.தி.மு.க.வாக இருந்தாலும் சரி… வழக்கம்போல உளறிக்கொட்டிய ஸ்டாலின்: நெட்டிசன்கள் மரண கலாய்!

Share it if you like it

ஈரோடு தேர்தல் பிரசாரத்தின்போது ஆளும் அ.தி.மு.க.வைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும் சரி, என்று வழக்கம்போல் ஸ்டாலின் உளறிக்கொட்டியதை வைத்து நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.

ஈரோடு கிழக்குத் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா., மறைவைத் தொடர்ந்து, அத்தொகுதிக்கு எதிர்வரும் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவடையும் நிலையில், அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கின்றன. இறுதிக்கட்ட பிரசாரம் என்பதால் தி.மு.க. தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் நேற்று இரவு ஈரோடு சென்றார். இரவு பிரசாரம் செய்ததோடு, இன்றும் பிரசாரம் மேற்கொண்டிருக்கிறார். பிரசாரத்தில் பேசிய ஸ்டாலின், “தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதிகள், உறுதிமொழிகள் எல்லாம் நிறைவேற்றித் தர வேண்டும் என்ற நம்பிக்கையோடு நீங்கள் வாக்களித்தீர்கள். தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று இந்த 2 ஆண்டு காலத்தில் செய்திருக்கக் கூடிய சாதனைகளை சொல்ல வேண்டும் என்று சொன்னால் ஒரு மிகப்பெரிய பட்டியலை எடுத்துச் சொல்ல வேண்டும். 234 தொகுதிகளிலும் உள்ள மக்களின் கோரிக்கைகளை கேட்டு நிறைவேற்றி வருகிறோம்.

எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நீட் மருத்துவ நுழைவு தேர்வுக்கு விலக்கு பெறுவது எனது லட்சியம். தி.மு.க. தேர்தல் அறிவிப்பு வாக்குறுதிகளில் முக்கியமாக ஒன்றை நீங்க மறந்தாலும் நான் மறக்கவில்லை. அது, குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைத் தொகை மாதம் 1,000 ரூபாய் வழங்குவோம் என்று சொன்னுதான். வருகிற மார்ச் மாதம் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட இருக்கிறது. அப்போது, பெண்களுக்கு எப்போது 1,000 ரூபாய் வழங்கப்படும் என்பதை அறிவிப்போம்” என்று பேசியவர், “தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை நாம் வெற்றிகரமாக நடத்தி பாராட்டுக்களை பெற்றிருக்கிறோம். அதேபோல், ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களும், அது ஆளும் அ.தி.மு.க.வைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும் சரி, நமது கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும் சரி” என்று, எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வை ஆளும் கட்சி என்று உளறிக் கொட்டி இருக்கிறார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்து விட்டுத்தான் நெட்டிசன்கள் ஸ்டாலினை மரண கலாய் கலாய்த்து வருகின்றனர். ஒரு நெட்டிசன், துண்டுச் சீட்டை மாற்றிக் கொடுத்து விட்டார்கள்போல என்றும், மற்றொருவர் தலைவர் ஃபார்மில் இருக்கிறார் என்றும், இன்னொருவர் வெயில் அதிகம்போல என்றும், மற்றொருவர் ஸ்டாலின் வெளிய வந்துட்டாரா, இனி காமெடி ஆரம்பம்தான் என்றும் கலாய்த்திருக்கிறார்கள். அதேபோல, இன்னொருவர் புலிகேசி எப்போதும் புலிகேசிதான் என்றும், அடுத்த தேர்தலுக்கு ஒத்திகை பார்க்கிறார்போல என்று மற்றொரு நெட்டிசனும் கலாய்த்து வருகிறார்கள். இதனால் சமூக வலைத்தளங்கள் தெறிக்கின்றன.


Share it if you like it