இடைத்தேர்தலில் ஆளும் கட்சி காசு கொடுத்துதான் வெற்றி பெறும் என இ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசிய காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சராக இருந்தவர் இ.வி.கே.எஸ். இளங்கோவன். இவர், பிரபல ஊடக நெறியாளர் பாண்டேவிடம் அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியிருக்கிறார் ; இடைத்தேர்தலை பொறுத்தவரை ஐனநாயகமாக நடக்காது. பணநாயகமாக தான் நடக்கும். ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் அதிக பணத்தை கொடுத்து வெற்றியை பெறுவார்கள். இது போலியான வெற்றி என பேசியிருக்கிறார். இந்த காணொளி தான் தற்போது வைரலாகி வருகிறது.