ஈ.வெ.ரா.வின் சுயரூபம் அம்பலப்படுத்திய தி.க. நிர்வாகி!

ஈ.வெ.ரா.வின் சுயரூபம் அம்பலப்படுத்திய தி.க. நிர்வாகி!

Share it if you like it

ஈ.வெ.ரா.வின் உண்மையான சுயரூபத்தை திராவிடர் கழகத்தை சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவர் அம்பலப்படுத்திய காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

திராவிடர் கழகத்தை நிறுவியர் ஈரோடு வெ.ராமசாமி நாயக்கர். இவர், பெண் விடுதலை, சுயமரியாதை, சமத்துவம் என ஊர் முழுக்க பிரச்சாரங்களை மேற்கொண்டவர். மேடை ஏறி பேசும் போது ஆறு போல பேச்சு, கீழே இறங்கி வந்த போது சொன்னது எல்லாம் போச்சு என்ற பொன்மொழிக்கு ஏற்ப இவரது செயல்பாடுகள் இருந்தன என்பது பலரின் குற்றச்சாட்டு. அந்த வகையில், தமிழ் ஒரு காட்டுமிரண்டி மொழி, தமிழ் ஒழிந்தால் என்ன நட்டம், தொல்காப்பியன் ஆரியக்கூலி, திருக்குறள் ஒரு மலம், வேலைக்காரியிடம் ஆங்கிலத்தில் பேசு, தமிழ் ஒரு சனியன் மொழி என்று மிக கடுமையாக தமிழை திட்டியவர்.

இதுதவிர, ஆண்களை போல பெண்களும் முடிவெட்டி கொள்ள வேண்டும். பெண்களின் கற்பு குறித்தும் அவதூறு பரப்பும் வகையில் கருத்து தெரிவித்தவர். மேலும், இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்க கூடாது. வெள்ளையன் நாட்டை விட்டு வெளியேற கூடாது என்று அவர்களிடம் மன்றாடியவர் இதே ஈ.வெ.ரா. என்பதை யாரும் மறந்திருக்க முடியாது.

இப்படிப்பட்ட சூழலில் தான், திராவிடர் கழகத்தை சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவர், ஆங்கிலேயர் காலை நக்கியவர் பெரியார். ஏன்னெனில், அவன் கால் சுத்தமாக இருக்கும் என பெரியார் கூறியதாக அந்த பெண் நிர்வாகி பேசிய காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it