மதம் மாற்றுவதே எங்கள் பணி! எஸ்றா. சற்குணம் திமிர் பேச்சு!

மதம் மாற்றுவதே எங்கள் பணி! எஸ்றா. சற்குணம் திமிர் பேச்சு!

Share it if you like it

மனிதர்களை பிடிப்பதுதான் எங்கள் வேலை, மதம் மாற்றுவதுதான் எங்கள் பணி என்று தி.மு.க.வின் தீவிர ஆதரவாளரும், கிறிஸ்தவ மதபோதகருமான எஸ்றா. சற்குணம் திமிராக பேசியிருப்பது இந்துக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமாக பரவிய சமயத்திலும், நிவர் புயல் பேயாட்டம் ஆடிய சமயத்திலும், ஏழை எளியவர்களை நேரடியாக சந்தித்து, அவர்களுக்குத் தேவையான உதவிகளை ஆர்.எஸ்.எஸ்., சேவா பாரதி போன்ற பல்வேறு தொண்டு நிறுவனங்கள் செய்தன. தமிழக மக்கள் கடும் இன்னல்களையும், நெருக்கடிகளையும் அனுபவித்து வந்த இந்த சமயத்திலும்கூட தி.மு.க.வின் தீவிர ஆதரவாளரான எஸ்றா. சற்குணம், மக்களுக்கு எந்த உதவிகளையும் செய்யாததோடு, கடந்த 4 மாதங்களாக காணிக்கை வரவில்லை என்று சில ஆண்டுகளுக்கு முன்பு புலம்பி இருந்தார்.

இந்த நிலையில்தான், கிறிஸ்தவ மதத்திற்கு மாற மறுத்து, பள்ளி நிர்வாகத்தின் கொடுமை தாங்காமல், சமீபத்தில் பூச்சி மருந்தைக் குடித்து உயிரை மாய்த்துக் கொண்டார் அரியலூரைச் சேர்ந்த மாணவி லாவண்யா. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை இருக்கிறது. ஆனால், லாவண்யாவின் மரணத்தை நியாயப்படுத்தும் வகையில், ‘மனிதர்களை பிடிப்பதுதான் எங்கள் வேலை’ என்று திமிராக பேசியிருக்கிறார் எஸ்றா. சற்குணம். அதாவது, மதம் மாற்றுவதுதான் எங்கள் வேலை என்கிற ரீதியில் பேசியிருக்கிறார். இந்த காணொளிதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it