நியூயார்க் போஸ்ட் பதிவிட்ட Fake News. தீவிரமாக பரப்பி வரும் சமூக விரோதிகள்…!

நியூயார்க் போஸ்ட் பதிவிட்ட Fake News. தீவிரமாக பரப்பி வரும் சமூக விரோதிகள்…!

Share it if you like it

கொரோனா தொற்றை தடுக்க. மத்திய அரசு விமான மார்கம், ரயில் மார்கம், சாலை மார்கம், என்று மிக தீவிரமான பணிகளை இன்று வரை மேற்கொண்டு வருகிறது என்பது நிதர்சனமான உண்மை. இதனை எல்லாம் கவனத்தில் கொள்ளாமல். தி.மு.க, தி.க, கம்யூனிஸ்ட், விசிக, காங்கிரஸ், கழக போராளிகள், கழக ஊடகங்கள், கழக பத்திரிக்கைகள், கிறிஸ்தவ மிஷநரிகள், இஸ்லாமிய அடிப்படைவாதிகள், உள்நாட்டு சதி, அறம் அற்ற ஊடகங்கள், உண்மையை கூற மறுக்கும் நெறியாளர்கள், அனைவரும் நரேந்திர மோதி எனும் ஒருவர் மீது கொண்ட அரசியல் வெறுப்பின் காரணமாக தொடர்ந்து பொய்களை பரப்பி வருகிறார்கள்.

இதனை எல்லாம் கருத்தில் கொள்ளாமல். தேசத்தின் நலன், ஏழை நாடுகளின் நலன், மற்றும் நமது அண்டை நாடுகளின் நலன், என்று பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசிகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை இன்று வரை வழங்கி வருகிறார்.

சிறிய நாடுகள் முதல் வல்லரசு நாடுகள் வரை உலகின் சிறந்த நண்பன் இந்தியா என்று போற்றி வருகிறது. இந்தியாவின் அசுர வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாத. சீனா போன்ற நாடுகள் மற்றும் கம்யூனிஸ சித்தாந்தத்தை மிக தீவிரமாக பின்பற்றும் பத்திரிக்கைகள் இந்தியா குறித்தும், மோடி குறித்தும், தவறான தகவல்களையே பரப்பி வருகின்றனர்.

நியூயார்க் போஸ்ட் பத்திரிக்கை கொரோனா நோய் இந்தியாவில் கை மீறி போய்விட்டதாகவும் அதற்கு இந்த காணொளியை ஒரு சாட்சி என்று 1 வருடத்திற்கு முன்பு நிகழ்ந்த சம்பவத்தின் காணொளியை எடுத்து தனது இணையதளத்தில் வெளியிட்டு உள்ளது. இதனை மோடியை வெறுக்கும் நபர்கள் பகிர்ந்து வருகின்றனர். மோடியை விரும்புவது, விரும்பாதது, தனிப்பட்ட நபரின் விருப்பமாக இருக்கலாம்.

ஆனால் நியூயார்க் போஸ்ட் இந்தியாவையே அவமானப்படுத்தும். நோக்கில் மிகவும் கீழ்த்தரமான எண்ணத்தில். இந்த செய்தியை வெளியிட்டு உள்ளது. இதற்கு தங்களின் கடும் கண்டனத்தையோ, எதிர்ப்பினையோ, கூட தெரிவிக்காமல். இந்த செய்தியை வேகமாக பகிர்ந்து வரும் நபர்களின் நோக்கம் என்னவாக இருக்கக்கூடும் என்பது நம்மால் ஊகிக்க கூடியது.

பொறுப்புள்ள இந்திய குடிமகனாக இருப்போம். தவறான செய்திகளை பகிராமல் நாம் விழித்து இருப்போம்..

Image


Share it if you like it