கள்ள ஓட்டுக்கு வக்காலத்து: தங்க.தமிழ்ச்செல்வன் உருட்டு!

கள்ள ஓட்டுக்கு வக்காலத்து: தங்க.தமிழ்ச்செல்வன் உருட்டு!

Share it if you like it

தி.மு.க கூட்டணி நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்றது. ஜனநாயக படுகொலையை நிகழ்த்தி வெற்றி பெற்றதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், கள்ள ஓட்டு போட்ட நபருக்கு ஆதரவாக தி.மு.க-வை சேர்ந்த தங்க தமிழ்செல்வன் பேசி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க கூட்டணி பெற்றது. படைபலம், அதிகார பலம் என அனைத்தையும் கட்டவிழ்த்து, விட்டு அராஜக வழியில் கிடைத்த வெற்றி இது என்பதை அறிவார்ந்த தமிழக மக்கள் நன்கு அறிவர். இந்த தேர்தலில் நிச்சயம் தி.மு.க கூட்டணி தான் வெல்லும் என்பதை அரசியல் விமர்சகர்கள் முன்பே கணித்து இருந்தனர். அதை போலவே வெளியான தேர்தல் முடிவுகள் உறுதி செய்தன.

தி.மு.க-வின் ஊடக பலம், மோடி வெறுப்பு, பொய் பிரச்சாரம், என அனைத்தையும் கடந்து. பா.ஜ.க 300-க்கும் மேற்பட்ட இடங்களில் அமோக வெற்றி பெற்றது. அராஜக செயல் மற்றும் ஜனநாயக படுகொலை நிகழ்த்தி, ஆளும் கட்சிக்கு கிடைத்த இந்த வெற்றிக்கு. பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். ஆனால், அது குறித்து எல்லாம் கவலைப்படாமல், தி.மு.க-வின் தீவிர விசுவாசியான மதிமாறன் கள்ள ஓட்டு போட்ட நபருக்கு ஆதரவாக சமீபத்தில் குரல் கொடுத்து இருந்தார். அந்த வகையில், பிரபல ஊடகமான தந்தி டிவிக்கு தங்க. தமிழ்செல்வன் கள்ள ஓட்டு போட்ட நபருக்கு ஆதரவாக பேசி இருக்கும் தற்பொழுது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Share it if you like it