பஞ்சாப் மாநிலத்தில் முதலமைச்சர் பகவந்த் சிங் மான் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு போதைப் பொருள் கடத்தல் விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதுகுறித்து அரசை எச்சரித்துள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அலுவலக வீதியிலான கடிதங்களுக்கு முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து பதில் வரவில்லை என புகார் தெரிவித்துள்ளார் மேலும் பஞ்சாப் மாநிலத்தில் போதை பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பாக அரசு எடுத்த நடவடிக்கை குறித்து பதில் தரவில்லை என்றால் அரசியல் அமைப்பு சட்டத்தின் படி 356 -வது பிரிவை பயன்படுத்தி குடியரசு தலைவர் ஆட்சியை பிரகடனப்படுத்த பரிந்துரை செய்யப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.