ஸ்டாலினுக்கு பா.ஜ.க. மூத்த தலைவர் எச்சரிக்கை!

ஸ்டாலினுக்கு பா.ஜ.க. மூத்த தலைவர் எச்சரிக்கை!

Share it if you like it

ஸ்டாலின் அரசின் அகம்பாவம் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இதேநிலை, நீடித்தால் அவரது ஆட்சி போய்விடும் என பா.ஜ.க. மூத்த தலைவர் ஹெச். ராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கோவையில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் இவ்வாறு கூறினார் :

அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்று கூறியது தொடர்பாக அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் முனுசாமி ஒரு கேள்வியை விடுத்துள்ளார். அண்ணாமலை பா.ஜ.க.வின் மாநில தலைவர். எனவே அவர் வெளியிட்டது பா.ஜ.க.வின் கருத்துதான்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் மத்திய அரசால் தடை செய்யப்பட்டதை கண்டித்து திருமாவளவன், சீமான் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறை உடனடியாக அனுமதி அளித்தது. ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு மட்டும் தொடர்ந்து தடை விதித்து வந்தனர். தமிழக அரசின் அகம்பாவம் உச்சகட்டத்துக்கு சென்றுள்ளது.

ஆளுநர் இன்டெலிஜென்ஸ் (உளவுத்துறை) அதிகாரி மட்டுமல்ல, இன்டெலிஜென்ட்-ம் (புத்திசாலி) ஆவார். ஸ்டாலின் அதிகம் பேசினால் ஆட்சி போய் விடும். பா.ஜ.க.விற்கு பிரச்சார பீரங்கியே ராகுல் காந்திதான். அவர் பேசிவிட்டு வந்தால் பத்தாயிரம் ஓட்டுகள் எங்களுக்கு அதிகமாக கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.


Share it if you like it