வருமானவரி துறை அதிகாரிகள் மீது நடந்த தாக்குதலை அரங்கேற்றியது இவர் தான் – அண்ணாமலை குற்றச்சாட்டு !

வருமானவரி துறை அதிகாரிகள் மீது நடந்த தாக்குதலை அரங்கேற்றியது இவர் தான் – அண்ணாமலை குற்றச்சாட்டு !

Share it if you like it

கரூர் மேயர் கவிதா அவர்களை குறித்து குற்றசாட்டை வைத்துள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. இதுதொடர்பாக, கரூரில் வருமானவரித்துறை அதிகாரிகள் மீது நடந்த தாக்குதலை முன் நின்று அரங்கேற்றியது கரூர் மேயர் கவிதா தான். ஆனால் இந்த வழக்கில் அவர் மீது காவல்துறை எந்த வழக்கும் பதியவில்லை. மேயராக இவர் செய்த சாதனைகள், மாநகராட்சி அலுவலகத்துக்கு 25 லட்ச ரூபாய்க்கு பேனா, பென்சில், பேப்பர் போன்ற எழுதுபொருட்கள் வாங்கியது, திருமாநிலையூர் பகுதியில் சுற்றுப்புறச்சூழல் அனுமதி பெறாமல் பேருந்து நிலையம் கட்ட தொடங்கியதால் தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் கரூர் மாநகராட்சிக்கு 25 லட்ச ரூபாய் அபராதம் விதித்தது. இவை மட்டும் தான்.

வரும் பாராளுமன்ற தேர்தலில், ஊழல் மிகுந்த மக்கள் விரோத திமுக கூட்டணியை முழுமையாகப் புறக்கணிப்போம். மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்கள் நல்லாட்சி தொடர, பாஜக கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்போம். இவ்வாறு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.


Share it if you like it