மதம் மாற்ற சர்ச்சை கருத்து: ஷாலின் மரியாவை கைது செய்ய வலியுறுத்தல்!

மதம் மாற்ற சர்ச்சை கருத்து: ஷாலின் மரியாவை கைது செய்ய வலியுறுத்தல்!

Share it if you like it

மத மோதலை தூண்டும் வகையில், ஹிந்துக்களை மதம் மாற்றம் செய்ய வேண்டும் என்று முகநூலில் கீழ்த்தரமாக பதிவிட்ட, தி.மு.க. மற்றும் வி.சி.க. ஆதரவாளரை தேச துரோக வழக்கு மற்றும் மத துவேச வழக்குப் பதிவு செய்து தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று ஹிந்து அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

தமிழகத்தில் பா.ஜ.க. பெற்றிருக்கும் மிகப்பெரிய வெற்றியை உ.பிஸ்களாலும், தேச விரோதிகளாலும், அடிமைப் போராளிகளாலும் ஜீரணிக்க முடியவில்லை. இதனால், பா.ஜ.க. மீதான தங்களது வன்மத்தை சமூக வலைத்தளங்களில் உமிழ்ந்து வருகின்றனர். அந்த வகையில், தி.மு.க. மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆதரவாளரும், தனக்குத்தானே எழுத்தாளர் மற்றும் சமூக ஆர்வலர் என்று அறிவித்துக் கொண்டவருமான ஷாலின் மரியா லாரன்ஸ், தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவு, ஹிந்துக்கள் மட்டுமல்லாது சாமானிய மக்கள் மத்தியிலும் கடும் அதிர்ச்சியையும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

ஷாலின் மரியா லாரன்ஸ் பதிவில், “தமிழகத்தில் பா.ஜ.க. மேலும் வளராமல் இருக்க இரு வழிகள் இருக்கின்றன. ஒன்று மதமாற்றம் அல்லது அயோத்திதாசர், அம்பேத்கர் சிந்தனைகளை மிகத் தீவிரமாக எடுத்துச் செல்வது. கடவுள் மறுப்பு என்பதை பா.ஜ.க. தன் ஆயுதமாகத்தான் பயன்படுத்தும். பண்பாட்டு ரீதியான மாற்றங்கள் மற்றும் வரலாற்று மீட்டிருவாக்கங்கள் மட்டுமே மத வெறுப்பு பிரசாரங்களை முறியடிக்கும்” என்று மிகவும் கீழ்த்தரமாக பதிவிட்டிருக்கிறார். அதாவது, ஹிந்துக்களை மதம் மாற்றம் வேண்டும் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார். இதுதான் மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

ஒரு சமூக வலைத்தளத்தில், அதுவும் பொதுவெளியில் இவர் இப்படியொரு கருத்தை பதிவு செய்திருக்கிறார் என்றால், எங்கிருந்து அவருக்கு இவ்வளவு தைரியம் வந்தது. அதுவும் ஹிந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் தமிழகத்தில், ஹிந்துக்களை மதம் மாற்ற வேண்டும் என்று ஷாலின் மரியா பதிவிட்டிருப்பதன் பின்னணியில் இருப்பது யார்? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. தமிழகத்தில் சமீபகாலமாக ஹிந்துக்களை நிந்திப்பது அதிகமாக அரங்கேறி வருகிறது. போராளிகள் என்கிற போர்வையில் உ.பிஸ் கொத்தடிமைகள், ஹிந்துக்களையும், ஹிந்து மதத்தையும் அவதூறாக பேசுவதையும், பதிவிடுவதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.

ஆகவே, ஹிந்து மதத்தையும், ஹிந்துக்களையும் பொதுவெளியில் நிந்திக்கும் சமூக விரோதிகளை மத்திய, மாநில அரசுகள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று ஹிந்துக்களும், ஹிந்து அமைப்புகளும் வலியுறுத்தி இருக்கின்றன. குறிப்பாக, ஹிந்துக்களை மதம் மாற்ற வேண்டும் என்று ஷாலின் மரியா லாரன்ஸ் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருப்பது மத மோதலை உருவாக்கும் வகையில் இருக்கிறது. ஆகவே, ஷாலின் மரியாவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று ஹிந்து அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

Image


Share it if you like it