ஹிந்துத்வம் காலத்தின் அறைகூவல் நூல் வெளியீடு!

ஹிந்துத்வம் காலத்தின் அறைகூவல் நூல் வெளியீடு!

Share it if you like it

ஹிந்துத்வம் காலத்தின் அறைகூவல் என்கிற புத்தக வெளியீட்டு விழா சென்னை சேத்துப்பட்டு மேயர் இராமநாதன் சாலையிலுள்ள சங்கராலயம் மண்டபத்தில் கடந்த 19-ம் தேதி நடந்தது.

இது கேரளாவைச் சேர்ந்த ப்ரக்ஞா ப்ரவாஹ் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஜெ.நந்தகுமார், ஆங்கிலத்தில் எழுதிய ‘ஹிந்துத்வா ஃபார் தி சேஞ்சிங் டைம்ஸ்’ என்கிற புத்தகத்தின் தமிழாக்கமாகும். இப்புத்தகத்தை தமிழாக்கம் செய்தவர் பிரபல எழுத்தாளரும், பத்திரிகையாளரும், மொழிபெயர்ப்பாளருமான ஜனனி ரமேஷ் என்பவராவார். இப்புத்தகத்தை விஜயபாரதம் பிரசுரம் வெளியிட்டிருக்கிறது. இப்புத்தக வெளியீட்டு விழாவில், சென்னை மற்றும் கர்நாடக உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் டி.என்.வள்ளிநாயகம் புத்தகத்தை வெளியிட, ஆங்கிலத்தில் எழுதிய ஜெ.நந்தகுமார் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில், தமிழில் மொழி பெயர்த்த ஜனனி ரமேஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


Share it if you like it