பாரதப் பிரதமர் மோடி, பாஜக, மற்றும் ஹிந்துக்களின் வழிப்பாட்டு முறையை விமர்சிப்பதையும், அவமதிப்பதையும், இன்று வரை வழக்கமாக கொண்டவர் வி.சி.க கட்சியின் தலைவர்கள் மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே.
தேர்தல் நெருங்கும் சமயத்தில், ஹிந்து ஆலயங்கள் சென்று, வழிபடுவது. வெற்றி பெற்ற பிறகு ஹிந்து மதத்தையும், ஹிந்துக்களின் உணர்வுகளையும், புண்படுத்தி பேசி வருவதையே தனது கொள்கையாக கொண்டவர். வி.சி.க தலைவரும், பிரபல ஆபாச பேச்சாளருமான திருமாவளன் என்பது மக்களின் பார்வையாக உள்ளது.
காவல் தெய்வமாகவும், எல்லைச்சாமியாகவும், தமிழக கிராம மக்களால் மிகவும் உயர்ந்த இடத்தில் வைத்து மதிக்கப்படும் காவல் தெய்வத்தின் சன்னதியில் காலணி அணிந்து கொண்டு போஸ் கொடுத்து ஹிந்து உணர்வுகளை புண்படுத்தி இருந்தார் வி.சி.க கட்சியின் மூத்த தலைவர் வன்னியரசு.
இந்நிலையில் பிரபல இணையதள ஊடகத்திற்கு அண்மையில் பேட்டி அளிக்கும் பொழுது இவ்வாறு பேசியுள்ளார் வன்னியரசு..
ஹிந்து என்று என்னை சொல்லாதீங்க எனக்கு அருவருப்பா இருக்கு.. ஹிந்து மதம் அழிக்கப்படும் வரை சமத்துவம் ஏற்படாது என்று அக்காணொளியில் பேசியுள்ளார். ஹிந்துக்களின் மீது திருமாவளவன் போன்று இவ்வளவு வன்மம் காட்டும் வன்னியரசு. எப்படி வாக்களித்த ஹிந்துக்களுக்கு உண்மையாக சேவை செய்ய முடியும் என்று நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கே இந்த தீயசக்தி கைது செய்யப் பட்டிருக்க வேண்டும். ஒரு கார்ட்டூனிற்காக வர்மாவை கைது செய்தவர்கள் இந்த சமூகவிரோதியை இன்னும் ஏன் கைது செய்யவில்லை. pic.twitter.com/vGd3Mh3gqA
— H Raja (@HRajaBJP) October 26, 2020

