பாக். பிரதமர் இம்ரான்கானின் 3-வது மனைவியும் பிரிவு?!

பாக். பிரதமர் இம்ரான்கானின் 3-வது மனைவியும் பிரிவு?!

Share it if you like it

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் 3-வது மனைவியும் அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான்கான். இவர், தனது காதலியான இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜமிலா கோல்டு ஸ்மித் என்வபரை 1995-ல் திருமணம் செய்து கொண்டார். திடீரென அரசியலில் குதித்தவர், 1996-ம் ஆண்டு பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் என்ற கட்சியை தொடங்கினார். பின்னர், 2004-ம் ஆண்டு ஜெமிலாவை விவாகரத்து செய்து விட்டார். இதன் பிறகு, ஆன்மிகம், அரசியல்வாதியாக வலம்வந்தவர், 2015-ல் பிரபல டி.வி. தொகுப்பாளரான ரேஹம் கான் என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இவர், ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்தானவர். ஆனால், இந்த திருமண வாழ்க்கை 10 மாதங்களிலேயே முடிவுக்கு வந்துவிட்டது.

இதன் பிறகு, மீண்டும் ஆன்மிகம், அரசியல் என வாழ்ந்து வந்தவர், 2018-ம் ஆண்டு தனக்கு பழக்கமான புஷ்ரா மனேகா என்பவரை 3-வதாக திருமணம் முடித்தார். இவரும் ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்தானவர்தான். இவருக்கு ஏற்கெனவே 5 குழந்தைகள் உள்ளனர். எனவே, திருமணத்துக்கு முன்பே மனேகாவுக்கு சில நிபந்தனைகளை விதித்திருந்தாராம் இம்ரான் கான். அதாவது, மனேகாவின் குழந்தைகளோ, உறவினர்களோ இம்ரான்கான் வீட்டுக்கு வரக்கூடாது என்பதுதான் அந்த நிபந்தனை.

ஆனால், மனேகாவின் மூத்த மகன் அடிக்கடி இம்ரான்கான் வீட்டுக்கு வந்து சென்றிருக்கிறார். இது இம்ரானுக்கு பிடிக்கவில்லை. இதனால், கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. மேலும், இம்ரான்கான் தனது வீட்டில் சில நாய்களை வளர்த்திருக்கிறார். இது மனேகாவுக்கு பிடிக்கவில்லை. இதன் காரணமாகவும் இருவருக்கும் சண்டை ஏற்பட்டிருக்கிறது. ஒரு கட்டத்தில், மனேகா கோவித்துக்கொண்டு, இம்ரான்கானை விட்டுப் பிரி்ந்து தனது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாராம். பின்னர், சமாதானமாகி மீண்டும் வந்திருக்கிறார்.

இந்த நிலையில்தான், மனேகா மீண்டும் கோவித்துக் கொண்டு இம்ரான்கான் வீட்டிலிருந்து வெளியேறி, லாகூரிலுள்ள தனது தோழி ஃபரா கான் என்பவரின் வீட்டில் தங்கி இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது. எனினும், ஃபரா கான் இத்தகவலை மறுத்திருக்கிறார். ஏற்கெனவே, இம்ரான்கான் தலைமையிலான அரசு மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர முடிவு செய்திருக்கின்றன. இந்த நிலையில், குடும்பத்திலும் குழப்பம் நிலவுவதால் இம்ரான்கான் படு அப்செட்டில் இருக்கிறாராம்.


Share it if you like it