பாரின்ல சோக்கா இருந்துட்டு இப்ப வந்து டபாய்க்கிறியா  ? – பங்கமாய் கலாய்த்த புளுசட்டை  !

பாரின்ல சோக்கா இருந்துட்டு இப்ப வந்து டபாய்க்கிறியா ? – பங்கமாய் கலாய்த்த புளுசட்டை !

Share it if you like it

சமீபத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நல குறைவால் காலமானார். அவருடைய உடலுக்கு பல அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் நடிகர் சூர்யா வெளிநாட்டில் இருந்ததால் விஜயகாந்த் இறப்பிற்கு வரவில்லை. அதற்கு பதிலாக காரில் பயணித்துக்கொண்டே கேப்டன் விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்தினார்.அதனால் தற்போது சூர்யா கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்தில் நேரில் சென்று கண்ணீர் விட்டு அழுது அஞ்சலி செலுத்தினார்.

அதன் பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த சூர்யா, ” அண்ணனின் பிரிவு மிகவும் கஷ்டமாக உள்ளது. சில படங்கள் நடித்த பிறகும் எனக்கு சரியான பாராட்டுக்கள் எதுவும் கிடைக்கவில்லை”.

“அந்த சமயத்தில் தான் அவருடன் சேர்ந்து பெரியண்ணா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அவருடன் சேர்ந்து பணியாற்றும் போது மிகவும் அன்புடன் கவனித்து கொண்டார். இறுதி அஞ்சலியின்போது அவருடைய முகத்தை பார்க்க முடியவில்லை என்பது எனக்கு மிகப்பெரிய இழப்பு” என்று கண்கலங்கிய படி சூர்யா கூறியுள்ளார்.

இந்நிலையில் சூர்யாவின் புகைப்படத்தை பதிவிட்டு அதன் பக்கத்தில் கிளிசரின் புகைப்படத்தை பதிவிட்டு “சென்னை மருந்துக்கடைகளில் க்ளிசரின் வியாபாரம் அதிகரிப்பு? ” என நக்கலாக சூர்யாவை கலாய்த்து பதிவிட்டிருக்கிறார் திரைப்பட விமர்சகர் மாறன்.

புத்தாண்டை வெளிநாட்டில் ஜாலியாக கொணடாடிவிட்டு இப்போது வந்து நீலி கண்ணீர் வடித்து நாடகமாடுகிறார் என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


Share it if you like it