குளங்கள் இருக்கும் மசூதிகளை ஆய்வு செய்ய வேண்டும்!

குளங்கள் இருக்கும் மசூதிகளை ஆய்வு செய்ய வேண்டும்!

Share it if you like it

நாடு முழுவதும் குளங்களுடன் அமைந்திருக்கும் அனைத்து மசூதிகளிலும் ஆய்வு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

இந்தியா முழுவதும் இருக்கும் பழமையான மசூதிகள், ஹிந்து கோயில்களை இடித்துவிட்டு கட்டப்பட்டவை என்று ஹிந்து அமைப்புகள் கூறிவருகின்றன. அந்த வகையில், சமீபத்தில் வாரணாசியிலுள்ள ஞானவாபி மசூதியில் நடத்தப்பட்ட ஆய்வின்போது, சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக வழக்கறிஞர்கள் குழு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருக்கிறது. எனினும், அது சிவலிங்கம் அல்ல, தாங்கள் தொழுகைக்கு முன்பு உடலை சுத்தம் செய்ய பயன்படுத்தும் செயற்கை நீரூற்று என்று மசூதி நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழலில்தான், நாடு முழுவதும் குளங்களுடன் இருக்கும் அனைத்து மசூதிகளிலும் சோதனை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் சுபம் அவஸ்தி, சப்தரிஷி மிஸ்ரா ஆகியோர் தாக்கல் செய்துள்ள அந்த மனுவில், “உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் குளத்துக்கு அருகே சிவலிங்கம் கண்டறியப்பட்டுள்ளது. அந்த இடத்தில் பல ஆண்டுகளாக முஸ்லிம்கள் தங்கள் உடலை சுத்தம் செய்யும் சடங்கில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த செயல், புனிதமான சிவலிங்கத்தை வேண்டுமென்றே அவமதிக்கும் நடவடிக்கை மட்டுமல்லாமல், ஹிந்து கடவுள்களின் மீதான வெறுப்புணர்வையும் பிரதிபலிக்கிறது. மேலும், ஹிந்துக்களின் மத உணர்வை புண்படுத்தும் விதமாக முஸ்லிம்களின் இந்த செயல்பாடு அமைந்துள்ளது. அதேபோல, ஹிந்து, சீக்கிய, பவுத்த மதத்தினரின் வழிபாட்டுத் தலங்கள் இடைக்காலத்தில் இடிக்கப்பட்டது அனைவருக்கும் தெரிந்ததே . எனவே, அந்த இடத்தில் இருக்கும் பழங்கால கடவுள் சிலைகள், சிற்பங்கள் முதலியவை சம்பந்தப்பட்ட மதத்தினருக்கே சொந்தமானவையாகும். அவற்றை மீட்டெடுத்து அவர்களுக்கு திருப்பி அளிக்க வேண்டியது அவசியம். ஆகவே, நாடு முழுவதும் குளங்கள் மற்றும் குட்டைகளுடன் அமைந்திருக்கும் மசூதிகளில் ரகசிய ஆய்வை மேற்கொள்ள உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். அப்போதுதான் தேவையில்லாத மத வெறுப்புணர்வுகள் தவிர்க்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


Share it if you like it