ரயில்வே நிலையத்தில் திருநங்கைகள் நடத்தும் முதல் டீ ஸ்டால் என்ற பெருமையை கவுகாத்தி ரயில் நிலையம் பெற்றுள்ளது.
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் ஒன்று அஸ்ஸாம். இம்மாநிலத்தின், புகழ் பெற்ற இடங்களில் ஒன்றாக இருப்பது கவுகாத்தி. அந்தவகையில், கவுகாத்தி ரயில் நிலையத்தில் நாட்டிலேயே முதன் முதலாக திருநங்கைகள் நடத்தும் வகையில் ’டீ ஸ்டால்’ ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதனை, மத்திய ரயில்வேதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது ட்விட்டர் பக்கத்தில் பெருமையுடன் வெளியிட்டுள்ளார்.