பாரதம் – அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திக்க உள்ளனர்

பாரதம் – அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திக்க உள்ளனர்

Share it if you like it

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோணி பிளிங்கனை பாரத வெளியுறவுத் அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேச உள்ளார். நியூயார்க் நகரில் கடந்த வாரம் ஐ.நா. பொது சபையின் கூட்டத்தொடர் நடந்தது. இதில், ஜெய்சங்கர் கலந்து கொண்டு பேசினார். இந்நிலையில், அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் அந்நாட்டு வெளியுறவு மந்திரி அந்தோணி பிளிங்கனை, மத்திய மந்திரி ஜெய்சங்கர் இன்று நேரில் சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பில் கனடாவில் காலிஸ்தானிய பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பற்றி ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது. எனினும், அதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரவில்லை.


Share it if you like it