2047 -க்குள் முழு வளர்ச்சியடைந்த பொருளாதார நாடாக இந்தியா மாறும் – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் !

2047 -க்குள் முழு வளர்ச்சியடைந்த பொருளாதார நாடாக இந்தியா மாறும் – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் !

Share it if you like it

2047-ஆம் ஆண்டுக்குள் 35 டிரில்லியன் டாலர் மதிப்புடன் முழு வளர்ச்சியடைந்த பொருளாதார நாடாக இந்தியா மாறும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது,

தற்போதைய 3.7 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை, 2047-ஆம் ஆண்டுக்குள் 30 முதல் 35 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்துவதும், நாட்டின் உணவு, எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதும் அரசின் லட்சியமாகும்.

கடந்த பத்தாண்டுகளில் நல்ல ஆளுமையுடன், ஏழைகளின் நலன் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் முழுமையான தொலைநோக்குப் பார்வை, இந்தியா உலகின் 11-வது பெரிய பொருளாதாரத்திலிருந்து, 5-வது பெரிய பொருளாதாரமாக மாற உதவியது. வரும் 2027-ஆம் ஆண்டில் 3-வது பெரிய மொத்த உள்நாட்டு உற்பத்தியாக இந்தியா உருவெடுக்கும்.

அந்நிய செலாவணி கையிருப்பில், கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் 4-வது மிகப்பெரிய நாடாக இந்தியா திகழ்கிறது. வளரும் நாடுகளின் நாணய மதிப்பில் இந்தியா சிறப்பாக செயல்படும் நாடுகளில் ஒன்றாகும். கடந்த 75 ஆண்டுகளில் இந்தியா மிகச் சிறந்த செயல்திறனை கண்டுள்ளது என்று கூறினார்.


Share it if you like it