கோவிலுக்கருகே மதுக்கடை : அடித்து நொறுக்கிய பூசாரி !

கோவிலுக்கருகே மதுக்கடை : அடித்து நொறுக்கிய பூசாரி !

Share it if you like it

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பிள்ளைகாளியம்மன் கோவில் ஒன்று உள்ளது. அந்த கோயிலின் பின்புறம் திருட்டுத்தனமாக பிளாக்கில் மதுபானங்களை விற்றும் குடித்தும் வந்துள்ளனர். இதனை கண்ட கோவில் பூசாரிகள் பலமுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கையையும் காவல் துறையினர் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைப்பெற்று கொண்டிருந்தது. அப்பொழுதும் வழக்கம்போல் மதுவிற்பனை செய்து குடித்து கொண்டிருந்தனர். இதனால் கோபமடைந்த கோவில் பூசாரி ஒருவர் கோவிலின் பின்புறம் சென்று அங்கு பிளாக்கில் விற்றுக்கொண்டிருந்த மதுபாட்டில்களை அடித்து நொறுக்கினார். இதை அருகில் இருந்தவர் வீடியோ எடுத்துள்ளார். இந்த காணொளியானது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

https://x.com/NewsTamilTV24x7/status/1759602121715147238?s=20


Share it if you like it