ISIS அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்ட ஜாபர் அலி கைது!

ISIS அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்ட ஜாபர் அலி கைது!

Share it if you like it

ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ISIS பயங்கரவாத இயக்கத்தில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த இளைஞர்கள் இணைந்துள்ளனர். இதைப்போல பல நாடுகளை சேர்ந்த இளைஞர்கள் இந்த இயக்கத்துக்கு ஆதரவாக தங்கள் நாடுகளில் அமைப்புகளை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஜாபர் அலி என்பவன் ISIS இயக்க ஆதரவாளராக செயல்பட்டு வந்திருக்கிறான்.இங்கு நடந்த முக்கியமான கொலை வழக்கில் சிக்கிய ஜாபர் அலி உள்ளிட்ட 6 பேர் வெளி மாநிலங்களுக்கு தப்பி ஓடினர். இந்த வழக்கில் அவர்களை தமிழக போலீசார் தேடி வந்தனர்.

ஜாபர் அலி மீது டெல்லி போலீசிலும் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. எனவே டெல்லி சிறப்பு போலீசாரும் ஜாபர் அலியை தேடி வந்தனர்.
இதன் பலனாக குஜராத் மாநில பயங்கரவாத தடுப்பு படையினரிடம் ஜாபர் அலி நேற்று சிக்கினான். வதோதரா நகருக்கு அருகே உள்ள கார்வா பகுதியில் வைத்து ஜாபர் அலியை அதிகாரிகள் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.


Share it if you like it