விவசாயிகளை தூண்டி விட்டது அரவிந்த் கெஜ்ரிவால் தான் – இந்து முன்னணி குற்றச்சாட்டு !

விவசாயிகளை தூண்டி விட்டது அரவிந்த் கெஜ்ரிவால் தான் – இந்து முன்னணி குற்றச்சாட்டு !

Share it if you like it

கிணறு தோண்ட பூதம் வந்த கதையாக டெல்லி முதல்வரான அரவிந்த் கெஜ்ரிவால் பற்றி பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருப்பதும், பசுத்தோல் போற்றிய புலியாக வலம் வந்த இவர்களைப் போன்ற தேசத் துரோகிகளை மக்கள் இனங்கண்டு கொள்ள வேண்டிய நேரமிது என்று இந்து முன்னணி அரவிந்த் கெஜ்ரிவாலை விமர்சித்துள்ளது. இதுதொடர்பாக இந்து முன்னணி எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-

மதுபான கொள்கைகள் மூலம் மோசடி செய்த அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கிணறு தோண்ட பூதம் வந்த கதையாக அவரைப் பற்றி பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தனிநாடு கேட்டு தொடர்ந்து நாட்டில் பிரச்சனைகளை ஏற்படுத்தி வரும் காலிஸ்தான் பயங்கரவாதிகளுடன் அவருக்கு நேரடி தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது…

2022 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டுகள் வரையில் காலிஸ்தான் பயங்கரவாதிகளிடமிருந்து அரவிந்த் கெஜ்ரிவால் 134 கோடி ரூபாய் பணம் பெற்றுள்ளார். அது மட்டுமல்லாமல் தேவிந்தர் பால் சிங் புல்லர் என்ற பயங்கரவாதியை சிறையில் இருந்து விடுவிக்க 2014 ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் காலிஸ்தான் ஆதரவு சீக்கியர்களுக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கும் இடையே ரகசிய சந்திப்பு நடந்ததென காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன் தெரிவித்துள்ளான். ஊழலுக்கு எதிராக களம் இறங்குகிறேன் என்ற பெயரில் கட்சி ஆரம்பித்து சமீபகாலமாக விவசாயிகளை தூண்டி விட்டது அரவிந்த் கெஜ்ரிவால் தான். பஞ்சாப் மற்றும் டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டம் என்ற பெயரில் நடைபெற்ற காலிஸ்தான் நாடு கேட்கும் பிரிவினைவாத போராட்டத்திற்கு பின்புலமாக அரவிந்த் கெஜ்ரிவால் இருந்தது என்று தெரிய வந்துள்ளது. பசுத்தோல் போற்றிய புலியாக வலம் வந்த இவர்களைப் போன்ற தேசத் துரோகிகளை மக்கள் இனங்கண்டு கொள்ள வேண்டிய நேரமிது…!!


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *