எல்லையில் ஊடுருவல்… பயங்கரவாதி சுட்டுக்கொலை!

எல்லையில் ஊடுருவல்… பயங்கரவாதி சுட்டுக்கொலை!

Share it if you like it

இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதியை ராணுவ வீரர்கள் அதிரடியாக சுட்டுக்கொன்றனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவி வருகின்றனர். ரோந்துப் பணியில் ஈடுபட்டுவரும் இந்திய ராணுவ வீரர்கள் இதுபோன்ற ஊடுருவல்காரர்கள் சுட்டுத்தள்ளி வருகின்றனர். அந்த வகையில், பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பகுதியில் இன்று அதிகாலை ராணுவ வீரர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பாகிஸ்தானை சேர்ந்த 3 பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றனர்.

இதையடுத்து, இந்திய ராணுவத்தினர் பயங்கரவாதிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். பதிலுக்கு பயங்கரவாதிகளும் திருப்பிச் சுட்டனர். இதனால், ராணுவ வீரர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை ஏற்பட்டது. எனினும், இந்திய ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாகிஸ்தான் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். அவனது உடல் துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்டது.

அதேசமயம், மற்ற 2 பேரும் காட்டுப் பகுதியில் தப்பி ஓடி விட்டனர். அவர்களையும் இந்திய ராணுவத்தினர் தேடி வருகின்றனர். இந்திய ராணுவத்தின் இந்த அதிரடி நடவடிக்கையால் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி தடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it