ஜம்முவில் ஹிந்துக்களை குறிவைத்து தாக்குல்: 4 பேர் பலி; 7 பேர் படுகாயம்!

ஜம்முவில் ஹிந்துக்களை குறிவைத்து தாக்குல்: 4 பேர் பலி; 7 பேர் படுகாயம்!

Share it if you like it

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும், 7 பேர் படுகாயமடைந்தனர். மேற்படி நபர்கள் ஹிந்துக்கள் தானா என்று அவர்களது ஆதார் கார்டை பார்த்து உறுதிசெய்து விட்டு, சுட்டுக் கொலை செய்திருக்கிறார்கள் பயங்கரவாதிகள். இதனால், ஜம்முவிலுள்ள ஹிந்துக்கள் அச்சத்தில் உறைந்து போய் இருக்கிறார்கள்.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ஜம்மு பகுதியைச் சேர்ந்தது ரஜோரி மாவட்டம். இம்மாவட்டத்தைச் சேர்ந்த டோங்கிரி கிராமத்தில் நேற்று நேற்று இரவு 7 மணியளவில் 2 பயங்கரவாதிகள் புகுந்திருக்கிறார்கள். இவர்கள், அங்கிருந்த 3 வீடுகளுக்குள் புகுந்திருக்கிறார்கள். பின்னர், அந்த வீட்டில் இருந்தவர்களின் ஆதார் கார்டுகளை வாங்கி பார்த்திருக்கிறார்கள். அவர்கள் ஹிந்துக்கள் என்பதை உறுதி செய்து கொண்டவர்கள், அதன்பிறகு அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். பின்னர், இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்கள். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சதீஷ் குமார், தீபக் குமார், பிரித்தம் லால், ஷிஷூ பல் ஆகிய 4 பேரும் வழியிலேயே உயிரிழந்து விட்டனர். மற்ற 7 பேரும் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தகவலறிந்த பாதுகாப்பு படையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பயங்கரவாதிகள் ஆதார் கார்டை வாங்கி பார்த்துவிட்டு துப்பாக்கி சூடு நடத்தி இருப்பதால், ஹிந்து மதத்தினரை குறிவைத்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. இத்தாக்குதல் சம்பவத்தையடுத்து, என்.ஐ.ஏ. அதிகாரிகள் டோங்கிரி கிராமத்திற்கு விரைந்தனர். இதனிடையே, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய ஒரு வீட்டிற்கு அருகே இன்று திடீரென குண்டு வெடித்திருக்கிறது. இதில், விஹன் குமார் என்கிற 4 வயது சிறுவன் உயிரிழந்திருக்கிறான். மேலும், 7 பேர் படுகாயமடைந்திருக்கிறார்கள். அதாவது, நேற்று தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் அப்பகுதியில் ஒரு பையில் ஐ.இ.டி. வெடிகுண்டை வைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். அந்த வெடிகுண்டு இன்று வெடித்திருக்கிறது. இதில்தான் சிறுவன் விஹன் குமார் உயிரிழந்திருக்கிறான். இச்சம்பவம் ஹிந்துக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it