7 நாட்கள் முன் GSTமீட்டிங் அழைக்கப்பட்டு இருந்த நிலையிலும். லேட்டா சொன்னாங்க அதான் போகவில்லை என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறிய விளக்கம் தான் இன்று வரை சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக உள்ளது என்பது நிதர்சனம். ஜிஎஸ்டி கூட்டத்தில் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று கேள்வி எழுப்பினால், 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் 16-ந் தேதி ஜெயகுமாரும் ஜிஎஸ்டி கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று எதிர்கேள்வி எழுப்பி இருக்கிறீர்கள்.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் அவர்கள் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களை கண்டித்து நீண்ட அறிக்கை ஒன்றினை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.