டெல்லியில் ஷ்ரத்தா… ஜார்கண்டில் பழங்குடியின பெண்… தில்தார் அன்சாரி கைது!

டெல்லியில் ஷ்ரத்தா… ஜார்கண்டில் பழங்குடியின பெண்… தில்தார் அன்சாரி கைது!

Share it if you like it

டெல்லியில் ஷ்ரத்தா என்கிற ஹிந்து இளம்பெண், அப்தாப் என்கிற இஸ்லாமிய அடிப்படைவாதியால் 35 துண்டுகளாக வெட்டிக் கொலை செய்யப்பட்டதைப் போல, ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஹிந்து இளம்பெண்ணை தில்தார் அன்சாரி என்கிற அடிப்படைவாதி 50 துண்டுகளாக வெட்டிக் கொலை செய்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஜார்கண்ட் மாநிலம் சாஹிப்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்தகிம் அன்சாரி மகன் தில்தார் அன்சாரி. இவனது முதல் மனைவி குலேரா உயிரோடு இருக்கும் நிலையில், அதே பகுதியில் வசிக்கும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ரூபிகா பஹாடன் என்கிற 22 வயது இளம்பெண்ணை லவ்ஜிகாத் காதல் வலையில் வீழ்த்தி, இரண்டாவதாக திருமணம் செய்திருக்கிறான். இந்த சூழலில், தில்தார் அன்சாரி, தனது தாய் மாமன் மொய்னுல் அன்சாரியின் வீட்டில் வைத்து, இருவரும் சேர்ந்து ரூபிகா பஹாடனை கொலை செய்திருக்கிறார்கள். பின்னர், இரும்பு வெட்டும் இயந்திரத்தின் மூலம் ரூபிகாவின் உடலை 50 துண்டுகளாக வெட்டி, வீட்டிலுள்ள சாக்கு பைக்குள் வைத்திருந்திருக்கிறார்கள்.

இதன் பிறகு, ரூபிகாவின் உடல் பாகங்களில் சிலவற்றை, போரியோ சந்தாலி பகுதியிலுள்ள அங்கன்வாடி மையத்தின் பின்புறம் நேற்று வீசியிருக்கிறார்கள். இவற்றை அப்பகுதியிலுள்ள நாய்கள் தின்றிருக்கிறது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள், போலீஸுக்குத் தகவல் கொடுத்திருக்கிறார்கள். இதையடுத்து, போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரித்தனர். அப்போது, அந்த இடத்தை ஒட்டிய பூட்டிய வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து, அந்த வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு, ரூபிகாவின் மற்றொரு உடல் பாகம் கிடக்கவே, அதை போலீஸார் மீட்டனர். இதைத் தொடர்ந்து அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.

பின்னர், ரூபிகாவின் கணவர் தில்தார் அன்சாரியை பிடித்து போலீஸார் விசாரித்தனர். அப்போது, ரூபிகாவை கொலை செய்ததை தில்தார் அன்சாரி கொலை செய்ததை ஒப்புக் கொண்டான். ஆனால், எதற்காக கொலை செய்தான் என்பதை தெரிவிக்கவில்லை. இச்சம்பவம் தொடர்பாக, தில்தாரின் தந்தை முஸ்தகிம் அன்சாரி, தாய் மரியம் கட்டூன், முதல் மனைவி குலேரா, சகோதரி ஷரேஜா கட்டூன், சகோதரர்கள் அமீர் அன்சாரி மற்றும் மஹ்தாப் அன்சாரி ஆகியோரையும் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். தலைமறைவாகி விட்ட தில்தார் அன்சாரியின் தாய் மாமன் மொய்னுல் அன்சாரியை போலீஸார் தேடி வருகின்றனர். இதுவரை ரூபிகாவின் விரல்கள், தோள்கள், கீழ் முதுகு, நுரையீரல், வயிறு, முன்கை மற்றும் இடுப்பு ஆகியவற்றை மட்டுமே போலீஸார் மீட்டிருக்கிறார்கள். மீதி பாகங்கள் கிடைக்கவில்லை.

டெல்லி பூனவாலா பகுதியில் இளம்பெண் ஷ்ரத்தா, அப்தாப் என்கிற இஸ்லாமிய அடிப்படைவாதியால் 35 துண்டுகளாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தற்போது ரூபிகா என்கிற பழங்குடியின இளம்பெண் 50 துண்டுகளாக வெட்டிக் கொல்லப்பட்டிருக்கும் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

உடல் பகுதிகளை தேடும் பணி தீவிரம்

Share it if you like it