தொடரும் லவ் ஜிகாத்: ஹிந்து பெண் சித்ரவதை!

தொடரும் லவ் ஜிகாத்: ஹிந்து பெண் சித்ரவதை!

Share it if you like it

டெல்லியில் வேலை பார்க்கும் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இஸ்லாமிய இளைஞன், தன்னை ஹிந்து எனக் கூறி, ஹிந்து இளம்பெண்ணை திருமணம் செய்த சம்வபம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஷாஜாத் அன்சாரி. இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த இவர், டெல்லியில் ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்திருக்கிறார். இங்கு உத்தரப் பிரதேசம் அசம்கர் பகுதியில் வசிக்கும் ஹிந்து மதத்தைச் சேர்ந்த பெண் ஒருவரும் பணிபுரிந்து வந்திருக்கிறார். இந்தப் பெண்ணை பார்ப்பற்காக அவரது உறவினர் பெண் ஒருவர் அடிக்கடி வந்து சென்றிருக்கிறார். அப்படி வரும்போது, அந்தப் பெண்ணுடன் ஷாஜாத் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். அப்போது தன்னுடைய பெயர் ரவீந்திரன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறார். பிறகு, தன்னுடன் பணிபுரியும் பெண்ணிடமிருந்து, அந்த உறவுக்காரப் பெண்ணின் செல்போன் நம்பரை வாங்கி, பேசி வந்திருக்கிறார். இதன் பிறகு, இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி, பழகி வந்திருக்கிறார்கள்.

இப்படி 6 மாதங்களாக பழகி வந்த நிலையில், ஒரு நாள் ஷாஜாத் அன்சாரி அங்குள்ள ஒரு ஹிந்து கோயிலில் வைத்து, அந்தப் பெண்ணை ஹிந்து முறைப்படி தாலி கட்டி திருமணம் செய்திருக்கிறார். பின்னர், தொழிற்சாலை அமைந்திருக்கும் பகுதியிலேயே வாடகைக்கு ஒரு வீடு எடுத்து இருவரும் குடும்பம் நடத்தி வந்திருக்கிறார்கள். இந்த சூழலில், ஷாஜாத் வேலை பார்த்து வந்த தொழிற்சாலையை திடீரென மூடிவிட்டார்கள். இதனால், பிழைப்பு வழியின்றி, ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள தனது சொந்த கிராமத்துக்குத் திரும்பி இருக்கிறார் ஷாஜாத். அங்கு சென்ற பிறகுதான், தனது கணவர் ஹிந்து அல்ல, இஸ்லாமியர் என்பது அந்தப் பெண்ணுக்குத் தெரியவந்திருக்கிறது.

இதனால், தம்பதிக்கிடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. அப்போது, ஷாஜாத்தும் அவரது தாய் உள்ளிட்ட உறவினர்களும் அந்தப் பெண்ணை தாக்கி இருக்கிறார்கள். மேலும், இஸ்லாமிய மதத்துக்கு மாறும்படி அப்பெண்ணை வற்புறுத்தி இருக்கிறார்கள். மறுத்ததால் தனி அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்திருக்கிறார்கள். பின்னர், அப்பெண்ணை வீட்டை விட்டே விரட்டி விட்டிருக்கிறார்கள். இதையடுத்து, அப்பெண் பன்ஷிதர் நகர் மகளிர் போலீஸில் புகார் செய்ததோடு, கத்வா மாவட்ட எஸ்.பி.யிடமும் முறையிட்டார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். தற்போது அப்பெண் கத்வா ரயில் நிலையத்தில் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது. ஹிந்து பெண்ணை லவ் ஜிகாத் முறைப்படி காதல் வலையில் வீழ்த்தி, திருமணம் செய்து ஏமாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it