காங்கிரஸ் எம்பி மீது அமைச்சர் செந்தில் பாலாஜி கடும் குற்றச்சாட்டு..!

காங்கிரஸ் எம்பி மீது அமைச்சர் செந்தில் பாலாஜி கடும் குற்றச்சாட்டு..!

Share it if you like it

கரூர் காங்கிரஸ் கட்சி எம்பி மீது தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு.

Normal 0 false false false EN-IN X-NONE X-NONE

மத்திய அரசு திட்டத்தின் மூலம் கரூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு முகாம்கள் நடத்தி அவர்களுக்கு தேவையான உபகரணங்களை உடனே வழங்க வேண்டும் என கரூர் மாவட்ட ஆட்சியரிடம் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி அவர்கள் சமீபத்தில் கடிதம் வழங்கி இருந்தார். ஆனால் தனது கடிதத்திற்கு உரிய பதில் கிடைக்கவில்லை என ஆட்சியர் மீது குற்றச்சாட்டு சுமத்தி அங்கேயே திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார் ஜோதிமணி. இது
கூட்டணி கட்சியினர் மத்தியிலும், மக்கள் மத்தியிலும், பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனை தொடர்ந்து தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த பொழுது தங்கள் இருப்பை காட்டி கொள்ள சிலர் இது போன்று நடந்து கொள்வதாக ஜோதிமணி மீது குற்றச்சாட்டை சுமத்தி இருப்பது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது
குறித்த மேலும் விவரங்களுக்கு பிரபல இணையதள ஊடகமான ABP லிங்க் கொடுக்கப்பட்டு உள்ளது.

Normal 0 false false false EN-IN X-NONE X-NONE

 


Share it if you like it