ஐ.ஏ.எஸ். மனைவியிடம் கே.எஸ். அழகிரி குடும்பம் நடுரோட்டில் வம்பு!

ஐ.ஏ.எஸ். மனைவியிடம் கே.எஸ். அழகிரி குடும்பம் நடுரோட்டில் வம்பு!

Share it if you like it

காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரியின் மகளும், பேரனும் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மனைவியிடம் நடுரோட்டில் வாக்குவாதம் செய்த காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தி.மு.க.வின் குடும்ப ஆட்சியில் அரசு ஊழியர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் அனுபவிக்கும் மன உளைச்சல் ஏராளம் என்பது சமூக ஆர்வலர்களின் ஒருமித்த கருத்து. அதனை மெய்ப்பிக்கும் வகையில், பல்வேறு சம்பவங்கள் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ். அழகிரியின் மகளும், பேரனும் ஐ.ஏ.எஸ். அதிகாரி கண்ணன் மனைவியின் கார் முன்னே நின்று கொண்டு கடும் வாக்குவாதம் செய்து போல அக்காணொளி அமைந்துள்ளது.

அந்த வீடியோவில், கே.எஸ். அழகிரியின் மகள் உயர் அதிகாரியின் மனைவியை பார்த்து நீ பைத்தியம், நீ பைத்தியம் என்று திட்டுகிறார். அதற்கு, ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மனைவியும் ஆவேசமாக பேசுகிறார். அப்போது, கே.எஸ். அழகிரியின் பேரன் நீ யாருடி மயிறு என்று கண்ணன் மனைவியை பார்த்து ஆபாசமாக திட்டுகிறார். நீ முதலில் காரில் இருந்து இறங்கு என்று காரை நோக்கி அவர் செல்வது போல அக்காணொளி அமைந்து இருக்கிறது. இதுகுறித்தான செய்தியினை தினகரன் வெளியிட்டுள்ளது.


Share it if you like it