முடிந்தது பேட்டி, கிழிந்தது வேட்டி, காற்றில் டிராவல் செய்த நாற்காலி: தொண்டரை பளார் விட்ட தலைவர்!

முடிந்தது பேட்டி, கிழிந்தது வேட்டி, காற்றில் டிராவல் செய்த நாற்காலி: தொண்டரை பளார் விட்ட தலைவர்!

Share it if you like it

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தொண்டர் ஒருவரை கன்னத்தில் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கட்சியில் உள்ள தலைவர்களையும், தொண்டர்களையும் அரவணைத்து செல்வதே கட்சி. ஆனால், இதற்கு நேர் எதிராக இருக்கும் கட்சி காங்கிரஸ். அதாவது, ப.சிதம்பரம் அணி, தங்கபாலு அணி, திருநாவுகரசு அணி, ஜோதிமணி என்று பல்வேறு அணிகளை கொண்ட அந்த கட்சியை ஒருங்கிணைத்து பத்திரிகையாளர்களை சந்திப்பை நடத்துவது தான் கே.எஸ். அழகிரியின் பணி.

தலைக்கு மேல் கத்தி தொங்குவதுதான் காங்கிரஸ் கட்சி தலைவரின் பணியாக இருந்து வருகிறது. நித்திய கண்டம் பூரண ஆயுசு என்பது போல காங்கிரஸின் நிலையிருந்து வருகிறது. அந்த வகையில், கே.எஸ். அழகிரி தலைமையில் சத்திய மூர்த்தி பவனில் நேற்றைய தினம் கட்சி கூட்டம் நடைபெற்று உள்ளது. அப்போது, வழக்கம் போல தலைவர் முன்னிலையிலேயே கோஷ்டி மோதல் வெடித்துள்ளது. இதையடுத்து, என்ன நடக்கும் என்பதை அறிந்து கோஷ்டி தலைவர்கள் தப்பினர். இருப்பினும், அப்பாவி தொண்டர்கள் மோதி கொண்டனர்.

இதையடுத்து, தலைவர் என்ற முறையில் மோதலை தடுக்க கே.எஸ். அழகிரி முயன்று இருக்கிறார். இருப்பினும், அவரால் முடியவில்லை. இதனை தொடர்ந்து, அவரும் களத்தில் இறங்கி தொண்டர் ஒருவர் கன்னத்தில் பளார் விட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த காணொளிதான் தற்போது வைரலாகி வருகிறது.


Share it if you like it