இந்தியாவிற்கு சுதந்திரம்: பெரியாருக்கு பெரும் பங்கு உண்டு!

இந்தியாவிற்கு சுதந்திரம்: பெரியாருக்கு பெரும் பங்கு உண்டு!

Share it if you like it

இந்தியாவிற்கு விடுதலை வாங்கி கொடுத்தவர்களில் தந்தை பெரியாரும் ஒருவர் என காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்து இருப்பது பொதுமக்கள் மத்தியில் பலத்த சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருப்பவர் கே.எஸ். அழகிரி. இவர், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் போன்று ஏராளமான கதைகளை அள்ளி விட கூடியவர். இதுதவிர, பத்திரிகையாளர்கள் எழுப்பும் கேள்விக்கு அவர் கொடுக்கும் விளக்கம் நகைச்சுவையின் உச்சமாக இருக்கும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.

அந்த வகையில், பிரபல ஊடகமான தந்தி டிவி அண்மையில் கே.எஸ். அழகிரியிடம் பேட்டி கண்டது. அப்போது, நெறியாளர் அசோகா அவரிடம் எழுப்பிய கேள்வி, காங்கிரஸ் கட்சி உதய்பூரில் ஒன்று கூடி சிந்தன் பைடெக் வைத்தார்கள். ஒரு குடும்பத்திற்கு ஒரு பதவி என்று சொல்கிறார்கள். கார்த்தி சிதம்பரம் எம்.பியாக இருப்பதால். ப.சிதம்பரம் மீண்டும் எம்.பியாக முடியாதே என்ற விதத்தில் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு, கே.எஸ். அழகிரி கூறியதாவது; இதனை நீங்கள் இப்படி பார்க்கலாமே, சிதம்பரம் ஒரு குடும்பம், கார்த்தி சிதம்பரம் ஒரு குடும்பம் என்று அற்புதமான முறையில் விளக்கம் கொடுத்து சீமானையே நிலை குலைய செய்தவர்.

இந்த நிலையில் தான், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி பத்திரிகையாளர் சந்திப்பில் வழக்கம் போல, ஒரு பொய் மூட்டையை அவிழ்த்து விட்டு இருக்கிறார் இது குறித்து அவர் கூறியதாவது; இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கி கொடுத்ததில், மிக முக்கிய பங்காற்றிய இயக்கம் காங்கிரஸ். மகாத்மா காந்தி அதனை மிகுந்த பேராண்மையோடு செய்தார். அந்தகால கட்டத்தில் பொதுவுடைமை இயக்கமும் சேர்ந்து செய்தது. பொதுவுடைமை கட்சியின் பங்கும் மகத்தானது. தமிழகத்தில், தந்தை பெரியார் அதனை செய்தார் என கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.

ஈ.வெ.ரா. தமிழ் மொழி மீதும் அவர் எப்படிப்பட்ட மனிதர் என்பதற்கும் கீழ்கண்ட காணொளிகளே சிறந்த உதாரணம் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it