ராகுலிடம் ஆட்சியை கொடுத்து விடாதீர்கள்: பதறும் ஃபாரின் பெண்மணி!

ராகுலிடம் ஆட்சியை கொடுத்து விடாதீர்கள்: பதறும் ஃபாரின் பெண்மணி!

Share it if you like it

ராகுல் வெளிநாட்டுக்காரர். வெளிநாட்டுக்காரர் என்னதான் இருந்தாலும் வெளிநாட்டுக்காரர்தான். ஆகவே, அவரிடம் ஆட்சியை கொடுத்து விடாதீர்கள் என்று வெளிநாட்டைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் கூறியிருக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வெளிநாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் கர்நாடக மாநிலத்துக்கு சுற்றுலா வந்திருந்தார். அவரிடம் கர்நாடகா டி.வி.யைச் சேர்ந்த நிருபர் ஒருவர் உங்களுக்கு கன்னடம் தெரியுமா என்று கேட்கிறார். அதற்கு தனக்கு கன்னடம் தெரியாது என்ன பதிலளிக்கிறார் அந்தப் பெண்மணி. தொடர்ந்து, இந்தியாவின் அடுத்த பிரதமராக யார் வர வேண்டும் என்று நினைக்கிறீர்கள் எனக் கேட்கிறார். சற்றும் யோசிக்காமல் மோடிதான் என்கிறார் அப்பெண்மணி. எனினும் விடாத அந்த நிருபர், ஏன் மோடிதான் பிரதமராக வேண்டும் என்று கேட்கிறார்.நான் ஒரு வெளிநாட்டுக்காரர். ஒரு வெளிநாட்டுக்காரரிடம் உங்கள் நாட்டை ஒப்படைத்து விடாதீர்கள். அப்புறம் உங்கள் நாடு அவ்வளவுதான். ஆகவேதான், இந்தியாவைச் சேர்ந்த மோடி பிரதமராக வரவேண்டும் என்று சொல்கிறேன் என்கிறார். இந்த பதிலிலும் திருப்தியடையாத அந்த நிருபர், அப்படியானால் ராகுல் காந்தி என்று கேட்கிறார். அதற்கோ, ராகுல் காந்தி பாதி இந்தியர், பாதி வெளிநாட்டவர். வெளிநாட்டுக்காரர் என்னதான் இருந்தாலும் வெளிநாட்டுக்காரர்தான். ஆகவே, ராகுல் காந்தி கையில் நாட்டை ஒப்படைத்து விடாதீர்கள். இதை இந்திய மக்கள் அனைவரிடமும் சொல்லுங்கள் என்று நிறைவு செய்கிறார். இந்த காணொளிதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it