தேஜஸ்வி சூர்யாவுக்கு சிறந்த அறிமுக எம்.பி.க்கான விருது… பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பாராட்டு!

தேஜஸ்வி சூர்யாவுக்கு சிறந்த அறிமுக எம்.பி.க்கான விருது… பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பாராட்டு!

Share it if you like it

கர்நாடகாவைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.பி. தேஜஸ்வி சூர்யாவுக்கு சிறந்த அறிமுக நாடாளுமன்ற உறுப்பினர் விருது வழங்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்.

பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் பிரிவான யுவ மோர்ச்சாவின் கர்நாடக மாநிலத் தலைவராக இருப்பவர் தேஜஸ்வி சூர்யா. இவர், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பெங்களூரு தெற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று, எம்.பி.யாக இருந்து வருகிறார். இவருக்குத்தான் சிறந்த அறிமுக நாடாளுமன்ற உறுப்பினர் விருது வழங்கப்பட்டிருக்கிறது. டெல்லியில் நடைபெற்ற விழாவில் தேஜஸ்வி சூர்யாவுக்கு இவ்விருது வழங்கப்பட்டிருக்கிறது. நாடாளுமன்றத்தில் மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டதோடு, தனது தொகுதி மக்கள் மற்றும் நாட்டு மக்களுக்கான திட்டங்கள் தொடர்பான முக்கிய பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்பியதற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், தேஜஸ்வி சூர்யாவுக்கு, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார். அதேபோல, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்புவும் வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார். தவிர, பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் தேஜஸ்வி சூர்யாவுக்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்ள். இதற்கு முன்பு, முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், எல்.கே.அத்வானி, ஹேமமாலினி, மீனாட்சி லேகி போன்ற புகழ்பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்விருதை பெற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it