முன்னாள் எதிர்க்கட்சி தலைவரை ’அவியல்’ செய்த கார்த்திகேயன்..!

முன்னாள் எதிர்க்கட்சி தலைவரை ’அவியல்’ செய்த கார்த்திகேயன்..!

Share it if you like it

தி.மு.க அரசு மதுக்கடைகள் திறக்கும் முடிவிற்கு. தமிழக மக்கள் தங்கள் கடும் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். மதுக்கடைகள் இல்லாத காரணத்தில் பல ஏழை, எளியவர்களின், இல்லங்களில் தற்பொழுது சிறிது நிம்மதி இருந்து வருகிறது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை.

சிலர் தாங்கள் செய்த முந்தைய தவறுகளை நினைத்து வருந்தவும். ஒரு சிலர் முற்றிலும் இக்குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட வேண்டும் என்று உறுதி பூண்டு இருக்கும் நிலையில். மீண்டும் மதுக்கடைகள் செயல்பட விடியல் அரசு முற்சி மேற்கொண்டு இருப்பது. மதுபிரியர்களின் எண்ணத்தையும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் நம்பிக்கையும், கெடுக்கும் செயல் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

  • மது இல்லாமல் தமிழக மக்கள் வாழ முடியும்.
  • மது எங்களுக்கு மிக மிக அவசியம் என்று தமிழக மக்கள் அரசிடம் தொடர் கோரிக்கை வைக்கவில்லை.
  • இருந்தாலும் தமிழக அரசு மக்கள் மீது திட்டமிட்டே மதுவை திணித்து வருகிறது என்பது கசப்பான உண்மை.

இந்நிலையில் நேற்றைய தினம் புதிய தலைமுறை ஊடகத்தில் பிரபல நெறியாளர் கார்த்திகேயன் தி.மு.க செய்தி தொடர்பாளரிடம் மதுக்கடைகளை தி.மு.க அரசு திறப்பது ஏன்? என்று  சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். புதிய தலைமுறை நெறியாளர் மூலமாக தி.மு.க மக்களை திசை திருப்ப நாடகம் ஆடுகிறது என்றும், அட இது நம்ம அமாவாசையா என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Image


Share it if you like it