கருணாநிதி சமாதி: எழுந்து வா… எழுந்து வா… கத்திய தொண்டர்கள்!

கருணாநிதி சமாதி: எழுந்து வா… எழுந்து வா… கத்திய தொண்டர்கள்!

Share it if you like it

கருணாநிதி சமாதியில் எழுந்து வா, எழுந்து வா என்று தி.மு.க. தொண்டர்கள் கத்திய காணொளி பொதுமக்கள் மத்தியில் பலத்த சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

தி.மு.க. இளைஞரணி செயலாளர் மற்றும் சேப்பாக்க எம்.எல்.ஏ.வாக இருப்பவர் உதயநிதி ஸ்டாலின். இவர், கடந்த டிச., 14 – ஆம் தேதி இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பு ஏற்றுக் கொண்டார். இதையடுத்து, புதிதாக அமைச்சர் பொறுப்பேற்ற உதயநிதிக்கு திரை பிரபலங்கள், தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து இருந்தனர். அந்தவகையில், சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கலைஞர் சமாதிக்கு சென்று மரியாதை செலுத்தினார். அப்போது, உதயநிதி ஸ்டாலினுடன் அமைச்சர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் சென்று இருந்தனர். அந்தவகையில், அங்கு குழுமியிருந்த தொண்டர்கள், எழுந்து வா, எழுந்து வா, என் தலைவா எழுந்து வா, எங்கள் அன்பு சின்னவரை காண்பதற்கு எழுந்து வா என்று கோஷம் எழுப்பி இருக்கின்றனர்.

சமாதியில் இருக்கும் மனிதர் எப்படி? எழுந்து வருவார். இதுதான், பகுத்தறிவு கட்சியா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Share it if you like it