கரூர் எம்.பி ஜோதிமணி திடீர் போர்கொடி..!

கரூர் எம்.பி ஜோதிமணி திடீர் போர்கொடி..!

Share it if you like it

தி.மு.க தலைமையிடம் கெஞ்சி, கதறி, கண்ணீர் விட்டு, 25 சீட்டுக்களை காங்கிரஸ். வாங்க வேண்டுமா என்று அக்கட்சியின் மூத்த தலைவர்கள் முதல் பொது மக்கள் வரை வெளிப்படையாக கருத்து கூறி வரும் இந்நிலையில். கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி அவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு தனது கடும் எதிர்ப்பினை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்..

காங்கிரஸ் தொண்டர்களின் மனதில் தற்போது கொந்தளித்துக்கொண்டிருக்கின்ற உணர்வுகளை நான் அறிவேன். தொகுதி,வேட்பாளர் தேர்வு வெளிப்படையாக இல்லை.நிறைய தவறு நடக்கிறது. தட்டிக்கேட்டேன். பதிலில்லை. தொண்டர்களின் இரத்தத்தை குடிக்கும் மனசாட்சியற்ற தலைவர்கள் நியாயத்தின் குரலை செவிமடுக்கவில்லை.

நீண்டகாலம் கட்சிக்கு உழைத்த வெற்றி வாய்ப்புள்ள உண்மையான விசுவாசிகள் புறக்கணிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.பணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் சீட் பெறமுடியும் என்பது அக்கிரமம்.காங்கிரஸ் கட்சி தொண்டர்களில் இரத்தத்திலும்,வியர்வையிலும் உருவானது. இதை அழிக்க யாருக்கும் உரிமையில்லை.

 

 


Share it if you like it