தி.மு.க. எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்ட இஸ்லாமிய பெண்கள்!

தி.மு.க. எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்ட இஸ்லாமிய பெண்கள்!

Share it if you like it

அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. இளங்கோ மற்றும் நகராட்சி கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகளை இஸ்லாமிய பெண்கள் முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் அமைந்திருக்கிறது பள்ளபட்டி. இப்பகுதியில் இஸ்லாமியர்கள் அதிகம் வசித்து வருகிறார்கள். இங்கு குடிநீர் விநியோகம், கழிவுநீர் கால்வாய்கள் பராமரிப்பு, சாலைகள் சீரமைப்பு உள்ளிட்ட விவகாரங்களில் பள்ளபட்டி நகராட்சி நிர்வாகம் மெத்தனம் காட்டி வந்ததாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர். மேலும், அப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடான நிலையில் இருப்பதாகவும் அவ்வப்போது புகார்கள் எழுந்து வந்தனர்.

இந்த சூழலில், பள்ளபட்டி பகுதியிலுள்ள அரசு மருத்துவமனை அருகில் புதிய திட்டப் பணிகள் தொடக்க விழா நேற்று நடந்தது. இதில் கலந்துகொள்வதற்காக, அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. இளங்கோ, நகராட்சி தலைவர் முனவர் ஜான், கமிஷனர் குமரன் மற்றும் அதிகாரிகள் வந்தனர். அப்போது, மேற்கண்ட குற்றச்சாட்டுகளைக் கூறியும், உடனடியாக அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரியும் சுமார் 25-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்கள் எம்.எல்.ஏ. இளங்கோ உள்ளிட்டோரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக எம்.எல்.ஏ. உறுதியளித்ததைத் தொடர்ந்து அப்பெண்கள் கலைந்து சென்றனர்.


Share it if you like it