5 வயது சிறுமி கடத்தி, பாலியல் பலாத்காரம், கொலை… அஸ்பக் ஆலம் கைது!

5 வயது சிறுமி கடத்தி, பாலியல் பலாத்காரம், கொலை… அஸ்பக் ஆலம் கைது!

Share it if you like it

கேரளாவில் 5 வயது சிறுமியை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து, காெலை செய்த அஸ்பக் ஆலம் என்பவனை போலீஸார் கைது செய்தனர். இச்சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அலுவா பகுதியில் பீகாரைச் சேர்ந்த தம்பதி வசித்து வருகின்றனர். வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த இவர்களின் 5-வயது மகளை, கடந்த 28-ம் தேதி மதியம் முதல் காணவில்லை. இதனால், பதறிப்போன பெற்றோர் உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸார் சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை செய்தபோது, சிறுமிக்கு ஒருவன் ஜூஸ் வாங்கிக் கொடுத்து கடத்திச் சென்றது தெரியவந்தது.

மேலும், அந்த சிறுமியை திருச்சூர் நோக்கிச் சென்ற பேருந்தில் ஏற்றிச் சென்றதும் உறுதியானது. உடனே சிறுமியை மீட்க போலீஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஆனால், சுமார் 20 மணி நேரம் பல்வேறு இடங்களில் சல்லடை போட்டு தேடியும் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த சூழலில், அலுவா சந்தைக்கு பின்புறம் உள்ள பெரியாறு ஆற்றை ஒட்டி சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் சிறுமியின் சடலம் இருந்தது.

பரிசோதித்தபோது சிறுமியின் பிறப்புறுப்பு உட்பட உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்தன. 5 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது உடற்கூறாய்வில் உறுதி செய்யப்பட்டது. விசாரணையில் இறங்கிய போலீஸார் சிறுமியை கடத்தியவன் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அஸ்பாக் ஆலம் என்பதை கண்டுபிடித்து கைது செய்தனர். இச்சம்பவத்தில் மேலும் சிலருக்கும் தொடர்பு இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்ரனர்.

5 வயது சிறுமி கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கும் இச்சம்பவம் கேரளா முழுவதும் கடும்ம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it