போதை பொருள் பறிமுதல்: நடிகர் பிருத்விராஜ் கைது?

போதை பொருள் பறிமுதல்: நடிகர் பிருத்விராஜ் கைது?

Share it if you like it

போதை பொருட்கள் சிக்கிய விவகாரத்தில் கேரள நடிகர் பிருத்விராஜ் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன். சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். லட்சத்தீவு கடல் வழியாக நடக்கும் கடத்தல் கொள்ளையைத் தடுக்க, பிரதமர் மோடி தலைமையிலான் மத்திய பா.ஜ.க. அரசு ஒரு சீர்திருத்த நடவடிக்கையை மேற்கொண்டது. அப்போது, மத்திய அரசுக்கு எதிராக தனது முகநூல் பக்கத்தில் ஒரு நீண்ட பதிவை இட்டு, மக்களை தூண்டி விட்டார். அதேபோல, கேரளாவில் நடந்த மாப்ளா கலவரத்தில் தொடர்புடைய இஸ்லாமிய அடிப்படைவாதிகளை விடுதலைப் போராட்ட வீரர்களாக சித்தரிக்க முயன்று பெரும் சர்ச்சையில் சிக்கினார். அதாவது, 1990-ல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஹிந்து பண்டிட்கள், இஸ்லாமிய பயங்கரவாதிகள் மற்றும் அடிப்படைவாதிகளால் இனப்படுகொலை செய்யப்பட்டனர் அல்லவா?

அதேபோல, 1921-ல் கேரள மாநிலம் மலப்புரத்திலும் ஹிந்துக்கள் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் இனப்படுகொலை செய்யப்பட்டனர். இந்த கொடூர சம்பவத்தை அரங்கேற்றியது வாரியம் குன்னத்து குஞ்சஹம்மது ஹாஜி என்பவர் தலைமையிலான பயங்கரவாதிகள். ஆனால் நடிகர் பிருத்விராஜ் சுகுமாரனோ, இப்படிப்பட்ட இஸ்லாமிய பயங்கரவாதிகளை, ஜிகாதிகளைப் போல (விடுதலைப் போராட்ட வீரர்களாக) சித்தரிக்கும் வகையில், ‘வாரியம்குன்னன்’ என்ற தலைப்பில் ஒரு படத்தை எடுக்க முயன்றார். எனினும், சினிமா தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட கேரள திரையுலகமே ஒன்று திரண்டு கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால், படம் கைவிடப்பட்டது. இதில் வேதனை என்னவென்றால், நடிகர் பிருத்விராஜ் சுகுமாரனின் நாயர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான் இக்கலவரத்தில் படுகொலை செய்யப்பட்டவர்கள் என்பதுதான்.

இந்த நிலையில்தான், புதிதாக மற்றொரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் பிருத்விராஜ். கொச்சியை அடுத்த தேவாரத்தில் நடிகர் பிருத்விராஜ் சுகுமாரனுக்குச் சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு இருக்கிறது. இங்கு ஏராளமான போதைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கேரள மாநில கலால்துறைக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இதையடுத்து, கலால் குழுவினர் அந்த குடியிருப்பில் சோதனை நடத்தினர். அப்போது, 6.92 கிராம் கோகோயின், 47.2 மில்லிகிராம் எல்.எஸ்.டி. மற்றும் 148 கிராம் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, அக்குடியிருப்பில் வசித்து வந்த புனலூரைச் சேர்ந்த 33 வயதான நுஜும் சலீம் குட்டி என்ற வாலிபரை போலீஸார் கைது செய்தனர். இவர் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர். அமெரிக்காவில் படிப்பை முடித்துவிட்டு, தொழில் தொடங்குவதற்காக இந்தாண்டுதான் கொச்சிக்கு வந்திருக்கிறார். இவர் அமெரிக்காவில் இருக்கும்போதே போதை பொருட்களை பயன்படுத்தி வந்தது தெரியவந்திருக்கிறது. தொடர்ந்து, கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த ஃபசலு என்பவரையும் போலீஸார் கைது செய்தனர். இந்த விவகாரத்தில் நடிகர் பிருத்விராஜ் சுகுமாரனுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். ஆகவே, நடிகர் பிருத்விராஜ் கைது செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.


Share it if you like it