சிறுவனிடம் சீண்டல்… ச்சீச்சீ பாதிரியார்!

சிறுவனிடம் சீண்டல்… ச்சீச்சீ பாதிரியார்!

Share it if you like it

கேரளாவில் சிறுவனிடம் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட பாதிரியாரை போலீஸார் கைது செய்திருக்கும் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ளது பரவூர் பகுதியில் வசித்து வருபவர் ஜோசப் கொடியன். 63 வயதாகும் இவர், வராப்புழா செயின்ட் தாமஸ் சர்ச்சில் பாதிரியாராக இருந்து வருகிறார். அதே பகுதியில் வசித்து வரும் 14 வயது சிறுவன் ஒருவன், இந்த சர்ச்சுக்கு அடிக்கடி வந்து சென்றிருக்கிறான். அப்படி ஒருமுறை அந்த சிறுவன் வந்தபோது, அவனை மிரட்டி ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டிருக்கிறார் பாதிரியார் ஜோசப். பின்னர், இது வாடிக்கையாகி அடிக்கடி நடந்து வந்திருக்கிறது. ஆனால், நாளுக்குநாள் பாதிரியாரின் தொல்லையை தாங்க முடியாத அந்த சிறுவன், நடந்த சம்பவம் குறித்து தன்னுடைய பெற்றோரிடம் சொல்லி கதறி அழுதிருக்கிறான்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த சிறுவனின் பெற்றோர், இதுகுறித்து போலீஸில் புகார் செய்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார், பாதிரியாரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, சிறுவனை மிரட்டி அடிக்கடி ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, பாதிரியார் ஜோசப்பை போலீஸார் கைது செய்தனர். பின்னர், இதேபோல பாதிரியார் எத்தனை பேருக்கு பாலியல் டார்ச்சர் கொடுத்திருக்கிறார் என்பது குறித்து விசாரிப்பதற்காக, அவரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, திடீரென வழியிலேயே பாதிரியார் மயங்கி விழுந்தார். இதைத் தொடர்ந்து, பாதிரியாரை சிகிச்சைக்காக எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை முடிந்ததும் பாதிரியார் ஜோசப்பை போலீஸார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

63 வயது கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் 14 வயது சிறுவனிடம் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட விவகாரம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it