தொடரும் கன்னியாஸ்திரிகளின் மர்ம மரணம்: உண்மையை உடைக்கும் சிஸ்டர் லூசி களப்புரா!

தொடரும் கன்னியாஸ்திரிகளின் மர்ம மரணம்: உண்மையை உடைக்கும் சிஸ்டர் லூசி களப்புரா!

Share it if you like it

கேரளாவில் மீண்டும் ஒரு கன்னியாஸ்திரி மர்ம மரணமான முறையில் இறந்திருக்கிறார். இதனால், வெகுண்டெழுந்திருக்கும் சிஸ்டர் லூசி களப்புரா, கன்னியாஸ்திரிகள் எப்படி மரணமடைகிறார்கள் என்று தோலுரித்துக் காட்டி இருக்கிறார்.

திருவல்லா பாலியேக்கர கன்னியாஸ்திரி மடத்தில் கடந்த 5 ஆண்டுகளாக வசித்து வந்தவர் திவ்யா டி ஜோய் என்ற 21 வயதான இளம்பெண். இவர்தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு அங்குள்ள கிணற்றில் இருந்து பிணமாக மீட்கப்பட்டிருக்கிறார். இதனால் வெகுண்டெழுந்துருக்கும் கன்னியாஸ்திரி லூசி களப்புரா, இந்த பெண்ணின் பெற்றோருக்காவது நீதி கிடைக்குமா என்று தன்னுடைய முகநூலில் பதிவிட்டிருக்கிறார். அப்பதிவில், “இரவில் ஏதேனும் ஒரு பாதிரியின் படுக்கை அறையில் வலுக்கட்டாயமாக தள்ளப்படும் பயிற்சி கன்னியாஸ்திரிகள், மறுநாள் கிணற்றிலோ, தண்ணீர் தொட்டியிலோ பிணமாக மீட்கப்படுவது என்றுதான் தீரும்? என்று வேதனை தெரிவித்திருக்கிறார்.

மேலும், 1987-ல் கன்னியாஸ்திரி மடத்தின் தண்ணீர் தொட்டியில் இறந்து கிடந்த சிஸ்டர் லிண்டா, 1988-ல் கொல்லம் தில்லேரியில் கொல்லப்பட்ட சிஸ்டர் மஃக்தேல், 1989-ல் ஃபயஸ் டென்ஸ் கான்வென்ட் கிணற்றில் இறந்து கிடந்த சிஸ்டர் அபயா, 1990-ல் கொல்லம் அருகே கொட்டியத்தில் இறந்து கிடந்த சிஸ்டர் மெர்சி, புல்பள்ளி மரக்காவு கான்வென்ட்டில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சிஸ்டர் ஆனிஸ் என இதுவரை கேரளாவில் கொல்லப்பட்ட கன்னியாஸ்திரிகளின் பட்டியலைுயம் தனது பதிவில் குறிப்பிட்டிருக்கும் லூசி களப்புரா, நேற்று இதோ திவ்யா டி ஜோய் என்று பதிவிட்டிருக்கிறார். அதோடு, இதில் ஒரு கொலைக்கும் சாட்சியில்லை, இதுவரை யாரும் தண்டிக்கப்படவும் இல்லை. வழக்குத் தொடுக்கப்பட்டாலும் சபைக்கு கேவலம் என்று கூறி இறந்த கன்னியாஸ்திரி குடும்பத்துக்கு பணத்தை கொடுத்து வாயடைக்க வைப்பதும், செய்தி சேனல்களில் ஒரு நாள் செய்தியாக வந்து ஒடுங்கிவிடுவதுமே வாடிக்கையான நிகழ்வாக இருக்கிறது.

மாறாக, இம்மாதிரி ஒரு மர்ம மரணம் ஹிந்து ஆசிரமத்தில் நிகழ்ந்திருந்தால் என்னவாகி இருக்கும்? என்று யோசித்து பார்க்கிறேன். இந்த டி.வி. சேனல் மாமாக்கள் வானுக்கும், பூமிக்குமாய் குதித்திருக்க மாட்டான்கள்?? பெண்ணுரிமை போராளிகள், எழுத்தாளர்கள், கலாசார காவலர்கள்னு கிளம்பி ஆசிரமத்தை எரிச்சிருக்க மாட்டானுங்க?? ஆனால், மிஷனரி மரணங்கள்னு தெரிஞ்சா இவனுங்க சப்தநாடியும் ஒடுங்கிவிடும். மீறி வாயை திறந்தால் பணத்தால் மூடி விடுவார்கள். உங்கள் குடும்பத்துக்கு தெய்வ அனுக்ரஹம் கிடைத்துள்ளதுன்னு சொல்லி ஏழைகள் வீட்டில் பிறக்கும் 2 பெண் குழந்தைகளில் ஒன்றை கன்னியாஸ்திரியாக்கச் சொல்லி, கடவுளின் பெயரால் நேர்ச்சை இட வைத்து, குறிப்பிட்ட வயதுக்கு மேல் கன்னியாஸ்திரி மடங்களில் தங்க வைத்து, அவர்களை தங்கள் மன வக்கிரங்களை தீர்க்கும் பாலியல் அடிமைகளாக வைத்திருக்கும் இந்த கத்தோலிக்க பாதிரிகளை தண்டிக்கவாவது இதோ வருக்கிறார்னு இவர்கள் கூப்பாடு போட்டு அழைக்கும் அவர் கொஞ்சம் சீக்கிரம் வரட்டும்” என்று டி.வி. சேனல்களையும், பாதிரியார்களையும் வறுத்தெடுத்து இருக்கிறார்.

இந்த கன்னியாஸ்திரி லாசி களப்புரா, ‘கர்த்தாவிண்டே நாமத்தில் ‘ என்ற பெயரில் சுயசரிதை ஒன்றை எழுதினார். இதில், பாதிரியார்களால் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் மற்றும் அத்துமீற முயன்றவர்கள் குறித்தும் எழுதியிருந்தார். இது கேரளாவில் பெரும் புயலைக் கிளப்பியது. இப்படி பாதிரியார்களின் குட்டை உடைத்ததால், லூசி களப்புரா சபையை விட்டு நீக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it