சிறுமி பலாத்காரம்: பாதிரியார் கைது!

சிறுமி பலாத்காரம்: பாதிரியார் கைது!

Share it if you like it

கேரளாவில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிரியார் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

திருமணம் செய்து கொள்ளாமல் துறவு வாழ்க்கை மேற்கொண்டு, ஊழியம் செய்வதை மட்டுமே லட்சியமாகக் கொண்டு செயல்படுபவர்கள் கிறிஸ்தவ பாதிரியார்கள். ஒருவருக்கு சிறு வயதில் ஞானஸ்தானம் கொடுப்பது முதல் அவர்களுக்கு திருமணம் செய்துவைப்பது வரை அனைத்துமே பாதிரியார்கள்தான். இதனால், கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மத்தியில் பாதிரியார்களுக்கு பயங்கர செல்வாக்கு. இவர்கள் சொல்வதைத்தான் வேதவாக்காகக் கருதி செயல்படுவது கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் வழக்கம். ஆனால், பாதிரியார்களிலும் சில கருப்பு ஆடுகள் இருக்கின்றன. இவர்கள் ஊழியம் என்கிற பெயரில் செய்யும் அட்டூழியத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. சர்ச்சுக்கு வரும் பெண்களிடம் இரட்டை அர்த்தங்களில் பேசுவதில் தொடங்கி பாலியல் பலாத்காரம் வரை தங்களது லீலைகளை அரங்கேற்றி விடுகின்றனர். இப்படித்தான் கேரளாவில் ஒரு பாதிரியார் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் கிறிஸ்டினா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 17 வயது சிறுமியான இவர், படிப்பில் மந்தமாக இருந்திருக்கிறார். எனவே, இங்குள்ள ஆர்த்தடாக்ஸ் சர்ச் பாதிரியாராக இருக்கும் பாண்ட்சன் ஜான் என்பவரிடம் கவுன்சிலிங்குக்காக சிறுமியை அனுப்பி இருக்கிறார்கள். ஆனால், பாதிரியாரோ கவுன்சிலிங் என்கிற பெயரில் அந்த சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறார். அதாவது, தினமும் காலையில் பூசை முடிந்ததும் சர்ச்சுக்கு வந்து விடுவாராம் சிறுமி கிறிஸ்டினா. அதன்படி, கடந்த மார்ச் 12-ம் தேதியும் சிறுமி கிறிஸ்டினா சர்ச்சுக்கு வந்திருக்கிறார். அப்போது, பாதிரியார் பாண்ட்சன் ஜான், சர்ச்சிலேயே சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறார்.

ஆனால், பலாத்காரம் செய்யப்பட்ட அச்சிறுமியோ, நடந்ததை பெற்றோரிடம் சொல்லவில்லை. மாறாக, மறுநாள் கவுன்சிலிங்குக்கு சர்ச்சுக்குச் செல்லவில்லை. இதனால், நடந்த சம்பவத்தை அச்சிறுமி பெற்றோரிடம் சொல்லி விட்டாரோ என்று பதட்டமடைந்த பாதிரியார், பதறியடித்துக் கொண்டு அச்சிறுமியின் வீட்டுக்கே வந்திருக்கிறார். ஆனால், விஷயம் பெற்றோர் வரை செல்லவில்லை என்பதை அறிந்து கொண்ட பாதிரியார், நல்லவரைப் போல சிறுமியை ரூமுக்குள் அழைத்துச் சென்று மீண்டும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறார். ஆனால், இதையும் பெற்றோரிடம் சொல்லாத சிறுமி, மறுநாளும் சர்ச்சுக்கு செல்ல மறுத்துவிட்டார்.

அதேசமயம், நடந்த விஷயம் அனைத்தையும் தனது தோழி ஒருவரிடம் சொல்லி, கண்ணீர் விட்டு கதறி அழுதிருக்கிறார் அச்சிறுமி. இதையடுத்து, அவரது தோழி பள்ளி நிர்வாத்திடம் சொல்லி இருக்கிறார். பின்னர், இதுகுறித்து சைல்டுலைன் அமைப்புக்கு தகவல் கொடுத்தது பள்ளி நிர்வாகம். இதைத் தொடர்ந்து, ஆர்த்தடாக்ஸ் சர்ச் பாதிரியார் பாண்ட்சன் ஜானை போலீஸார் கைது செய்தனர். இதன் பிறகுதான், சிறுமி கிறிஸ்டினாவின் பெற்றோருக்கே விஷயம் தெரியவந்திருக்கிறது. கவுன்சிலிங்குக்கு வந்த சிறுமியை பாதிரியார் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம், கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it