மாணவி கூட்டு பலாத்காரம்: ஷாஜி கைது; 2 பேருக்கு வலை!

மாணவி கூட்டு பலாத்காரம்: ஷாஜி கைது; 2 பேருக்கு வலை!

Share it if you like it

கேரளாவில் நண்பரின் மகளான 16 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த நண்பர்கள் 3 பேரில் ஷாஜி என்பவரை போலீஸார் கைது செய்தனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர்.

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் வடக்கேக்காடு பகுதியைச் சேர்ந்த கஞ்சா வியாபாரியை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். இதனால், அவரை ஜாமீனில் எடுப்பதற்காக, அவரது மனைவி கோர்ட்டுக்கும், போலீஸ் ஸ்டேஷனுக்குமாக அலைந்து வந்திருக்கிறார். அப்போதெல்லாம் இவர்களது மகள் 16 வயதாகும் 12-ம் வகுப்பு படிக்கும் சிறுமி, தனியாக இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. ஆகவே, கஞ்சா வியாபாரியின் நண்பர்களான ஷாஜி உட்பட 3 பேரிடம், மகளை பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டுச் சென்றிருக்கிறார். இப்படி ஒருமுறை சென்றிருந்த சமயத்தில், நண்பர்கள் 3 பேரும் சேர்ந்து வீட்டுக்கு வந்திருக்கிறார்கள்.

அப்பாவின் நண்பர்கள்தானே என்று அச்சிறுமி நினைத்திருந்த நிலையில், திடீரென 3 பேரும் சேர்ந்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள். இதன் பிறகு, ருசிகண்ட பூனைபோல 3 பேரும் சேர்ந்து அந்த மாணவியை மிரட்டி அடிக்கடி பாலியல் வன்கொடுமை செய்து வந்திருக்கிறார்கள். இப்படி 2 மாதமாக மாணவியை சித்ரவதை செய்து வந்திருக்கிறார்கள். மேலும், இந்த விஷயத்தை யாரிடமாவது சொன்னால், குடும்பத்தோடு கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி இருக்கிறார்கள். இதன் காரணமாக இந்த விஷயத்தை மாணவி யாரிடமும் சொல்லவில்லை. அதேசமயம், மாணவி கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானார்.

மேலும், தினசரி பள்ளிக்கு செல்லும்போது சோர்வாகவே இருந்திருக்கிறார். இதைப் பார்த்துவிட்டு சந்தேகமடைந்த ஆசிரியர் ஒருவர், என்ன ஏது என்று விசாரித்திருக்கிறார். அதற்கு அந்த மாணவி தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறவே, அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார். அவரை பரிசோதித்த டாக்டர், மாணவி பாலியல் வன்கொடுமை செய்யபட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்ததோடு, அவரை அழைத்துச் சென்ற ஆசிரியரிடமும் விவரத்தை கூறியிருக்கிறார். இதன் பிறகு, அந்த மாணவியிடம் ஆசிரியர்கள் தனியாக விசாரணை நடத்தியபோதுதான், அவரது தந்தையின் நண்பர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவரம் தெரியவந்திருக்கிறது.

இதையடுத்து, குழந்தை உதவி மைய அதிகாரிகளிடம் ஆசிரியர்கள் புகார் செய்திருக்கிறார்கள். அவர்கள் லோக்கல் போலீஸாரை அணுகி நடந்த விவரத்தை கூறியிருக்கிறார்கள். பின்னர், அந்த மாணவியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், பாலியல் பலாத்காரம் செய்த நண்பர்களில் ஒருவரான 26 வயதான ஷாஜியை கைது செய்தனர். இதையறிந்த மற்ற இருவரும் தலைமறைவாகி விட்டார்கள். அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். தனது தந்தையின் நண்பர்களாலேயே மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கும் சம்பவம் கடும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it