கிறிஸ்தவ மதத்திற்கு மாற எதிர்ப்பு தெரிவித்த மாப்பிள்ளை மீது கொடூர தாக்குதல் நடத்திய பெண் வீட்டை சேர்ந்தவர்..!

கிறிஸ்தவ மதத்திற்கு மாற எதிர்ப்பு தெரிவித்த மாப்பிள்ளை மீது கொடூர தாக்குதல் நடத்திய பெண் வீட்டை சேர்ந்தவர்..!

Share it if you like it

மதம் மாற மறுத்த மாப்பிள்ளை மீது கொடூர தாக்குதல் நிகழ்த்திய சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள கோணக்காடு பகுதியை சேர்ந்தவர் மிதுன் இவர் ஹிந்து மதத்தை சேர்ந்தவர். அவரின் காதலி தீப்தி கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். இரு வீட்டாரின் கடும் எதிர்ப்பையும் மீறி அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதனை தொடர்ந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாற வேண்டும் என தனது மாப்பிள்ளையை வற்புறுத்தியுள்ளார் பெண்ணின் அண்ணன்.

இதனை ஏற்றுக்கொள்ள மறுத்து உள்ளார் மிதுன், இதனால் கடும் ஆத்திரம் அடைந்த பெண்ணின் அண்ணன் டேனிஸ். மிதுன் மீது கொடூர தாக்குதல் நிகழ்த்தியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை பிரபல ஊடகமான தந்தி டிவி செய்தியாக வெளியிட்டு உள்ளது. ஹிந்து மதத்தில் மட்டுமே ஜாதி உள்ளது என்று தொடர்ந்து கூறி வரும் தி.க, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தோழர்கள் மற்றும் பா.ஜ.க ஆளும் மாநிலத்தை மட்டுமே தொடர்ந்து குறை கூறி வரும் அருணன் போன்றவர்கள் இது குறித்து பேசுவார்களா என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Share it if you like it