மக்களை தேடி நீதிபதிகள்… மத்திய அமைச்சர் சூப்பர் தகவல்!

மக்களை தேடி நீதிபதிகள்… மத்திய அமைச்சர் சூப்பர் தகவல்!

Share it if you like it

கிராம மக்களின் குறைகளை போக்கும் விதமாக அவர்களை தேடி நீதிபதிகள் வருவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், அத்தியூர் திருக்கை எனும் இடத்தில் கிராம சபை கூட்டம் நேற்றைய தினம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, பா.ஜ.க. மூத்த தலைவர் வினோஜ் செல்வம் மற்றும் அக்கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், கிராம மக்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, மத்திய அமைச்சர் பேசும் போது இவ்வாறு கூறினார் ;

ஏழை மக்கள், சாதாரண மக்கள் மற்றும் விவசாய மக்கள் அதிகம் வசிக்கும் கிராமங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆய்வு செய்யவே தாம் தமிழகம் வந்துள்ளதாக கூறினார். மேலும், கிராம மக்களின் குறைகளை களையும் பொருட்டு கிராமத்திற்கு நேரடியாக நீதிபதிகள் வரும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என தெரிவித்தார்.

தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் தாய் மொழியான தமிழில் நீதிபதிகள் வாதாடும் படி தாம் கேட்டு கொண்டுள்ளதாக கிராம மக்களிடம் கூறினார். இதனிடையே, புதுவை மாநில மக்களை நேரில் சந்தித்து அவர்களிடம் மத்திய அமைச்சர் உரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it