மண்வெட்டியால் வெட்டி புதைத்து விடுவேன்… மில் உரிமையாளரை தாக்கிய தி.மு.க. பெண் வார்டு மெம்பர்!

மண்வெட்டியால் வெட்டி புதைத்து விடுவேன்… மில் உரிமையாளரை தாக்கிய தி.மு.க. பெண் வார்டு மெம்பர்!

Share it if you like it

கிருஷ்ணகிரி அருகே மில் உரிமையாளரை தாக்கியதோடு, மண்வெட்டியால் வெட்டி புதைத்து விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்த தி.மு.க. பெண் வார்டு உறுப்பினர் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகேயுள்ள பண்ணந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியண்ணன் மகன் சக்திவேல். இவர், பண்ணந்தூர் – அரசம்பட்டி சாலையில் தவிடு மில் வைத்து நடத்தி வருகிறார். கடந்த 40 வருடங்களுக்கு முன்பு இவரது வீட்டிற்கு முன்பு சிறுபாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலத்தின் வழியாகத்தான் சக்திவேல் வீட்டிற்குச் சென்று வந்திருக்கிறார்.

இந்த சூழலில், பண்ணந்தூர் 7-வது வார்டு உறுப்பினராக இருக்கும் தி.மு.க.வைச் சேர்ந்த மஞ்சுளா, டிராக்டரில் மணலை ஏற்றிக் கொண்டும், சுமார் 10-க்கும் மேற்பட்ட தனது உறவினர்களுடன் வந்து, சக்திவேலின் தவிடு மில் முன்புறம் மணலை கொட்டி தகராறில் ஈடுபட்டிருக்கிறார். இதை தட்டிக்கேட்ட சக்திவேலை கன்னத்தில் அறைந்ததோடு, மண் வெட்டியால் வெட்டி உன்னை இங்கேயே புதைத்து விடுவேன் என்று மிரட்டி இருக்கிறார்.

இதில் காயமடைந்த சக்திவேல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த பலரும் தி.மு.க.வில் ஆண்களுக்கு இணையாக பெண் நிர்வாகிகளும் அராஜகத்தில் ஈடுபடுவதை வன்மையாக கண்டித்து வருகின்றனர்.


Share it if you like it