சவுண்ட் விட்ட தி.மு.க. பிரமுகர்… சக்கையாக பிழிந்த நாம் தமிழர் கட்சியினர்!

சவுண்ட் விட்ட தி.மு.க. பிரமுகர்… சக்கையாக பிழிந்த நாம் தமிழர் கட்சியினர்!

Share it if you like it

கிருஷ்ணகிரி அருகே நாம் தமிழர் கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் சவுண்ட் விட்ட தி.மு.க. பிரமுகரை, அக்கட்சியினர் சக்கையாக பிழிந்து எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள புளியண்டபட்டி கிராமத்தில் வசிக்கும் குறவர் இனத்தைச் சேர்ந்த பெண்களை ஆந்திர மாநில போலீஸார், திருட்டு வழக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்று நிர்வாணப்படுத்தி, பிறப்புறுப்பில் மிளகாய் பொடி தூவி சித்ரவதை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இதை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் மகளிர் அணி சார்பில், போச்சம்பள்ளி அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது அங்கு வந்த மேகநாதன் என்ற தி.மு.க. பிரமுகர், நாம் தமிழர் கட்சியினர் விவசாய நிலங்களை ஆக்கிரமிப்பதாகக் கூறி சவுண்ட் விட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள், தனியாக சிக்கிய தி.மு.க. பிரமுகரை கும்பலாக சேர்ந்து தாக்கினர். இதைக் கண்ட காவல் துறையினர் உள்ளே புகுந்து தி.மு.க. பிரமுகரை காப்பாற்ற முயன்றனர். ஆனாலும் நாம் தமிழர் கட்சியினர் திமிறிக் கொண்டு தாக்குதலை தொடர்ந்தார். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, நாம் தமிழர் கட்சியினரிடமிருந்து போராடி தி.மு.க. பிரமுகரை போலீஸார் மீட்டுச் சென்றனர். இதன் பிறகு, தாக்குதலில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தி.மு.க.வினர் போலீஸில் புகார் அளித்திருக்கிறார்கள்.


Share it if you like it