‘கராத்தே’ மூலம் பந்தாடிய பெண்: இணையத்தில் வைரலாகும் வீடியோ!

‘கராத்தே’ மூலம் பந்தாடிய பெண்: இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Share it if you like it

இளம்பெண் ஒருவர் கராத்தே மூலம் 6 பேரை பந்தாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. குறிப்பாக, சில காமுகர்களால் சிறுமிகளும் பாலியல் பலாத்கார வன்முறைக்கு ஆளாகி வருகிறார்கள். ஆகவே, குழந்தை பருவத்திலேயே குட் டச், பேட் டச் போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய கட்டாய நிலைக்கு நாடு தள்ளப்பட்டிருக்கிறது. மேலும், சிறு வயதிலேயே பெண் குழந்தைகளுக்கு தற்காப்புக் கலைகளையும் கற்றுக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. அந்த வகையில், ஆண்கள் மட்டுமே கற்றுவந்த சிலம்பம், கராத்தே, குத்துச்சண்டை உள்ளிட்ட தற்காப்புக் கலைகளை பெண் குழந்தைகளும் கற்றுக் கொள்ளத் தொடங்கி இருக்கிறார்கள்.

இந்த நிலையில்தான், இளம்பெண் ஒருவர் தனது கராத்தே கலையால், 6 இளைஞர்களை துவம்சம் செய்யும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு ரோட்டில் இளம்பெண் ஒருவர் கைப்பையுடன் நடந்து வருகிறார். இதைக் கண்ட 6 இளைஞர்கள், அப்பெண்ணை பின்தொடர்ந்து சென்று வம்பிழுக்கிறார்கள். இதனால் ஆத்திரமடைந்த அப்பெண், தனது கராத்தே கலையை பயன்படுத்தி, 6 இளைஞர்களையும் புரட்டிப் புரட்டி எடுக்கிறார். இதை யாரோ வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்திருக்கிறார்கள். இந்த வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

எனினும், இந்த சம்பவம் உண்மையிலேயே நடந்ததா அல்லது பெண் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரங்கேற்றப்பட்டதா என்பது தெரியவில்லை.


Share it if you like it