தமிழக பெண்களை கீழ்த்தரமாக கிண்டல் செய்த தி.மு.க-வின் மூத்த ஆபாச பேச்சாளர் லியோனி..!

தமிழக பெண்களை கீழ்த்தரமாக கிண்டல் செய்த தி.மு.க-வின் மூத்த ஆபாச பேச்சாளர் லியோனி..!

Share it if you like it

ஆர்.எஸ். பாரதி, தமிழன் பிரசன்னா, உதயநிதி ஸ்டாலின், வரிசையில். தி.மு.க-வின் மூத்த ஆபாச பேச்சாளரான திண்டுக்கல் ஜ. லியோனி. தி.மு.க வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதியை ஆதரித்து அண்மையில் தொண்டாமுத்தூர் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

பா.ஜ.க-வையும், மோடியையும், விமர்சிப்பதையே வழக்கமாக கொண்ட லியோனி. பட்டிமன்றங்களில் பேசுவது போல பொதுமக்கள் முன்னிலையில் பெண்களை ஆபாசமாக பேசியுள்ளார். லியோனி கூறியதாவது.

திண்டுக்கல் லியோனிக்கு கொள்கை பரப்புச் செயலாளர் பதவி! - மு.க.ஸ்டாலின், உதயநிதியிடம் வாழ்த்து பெற்றார்! | nakkheeran

ஃபாரீன் மாட்டு பாலை குடித்து, நம்ம ஊர் பெண்களும், அவரின் குழந்தைகளும் பலூன் மாதிரி இத்த தண்டி ஊதிக்கிடப்பதாக கிண்டல் செய்து உள்ளார். ஒரு காலத்தில் பெண்களின் இடுப்பு 8 மாதிரி இருந்தது. குழந்தைகளை தூக்கி இடுப்பில் வைத்தால் அவன் பாட்டுக்கு இடுப்பில் அமர்ந்து கொண்டான்.

முன்பு எல்லாம் பெண்களின் இடுப்பு எட்டு போல இருந்ததது. வெளிநாட்டு பாலை  பாலை குடித்ததால்., இப்பொழுது அவர்களின் இடுப்பு பேரல் போலாகி விட்டது,  பிள்ளையை தூக்கி இடுப்பில் வைத்தால் வழுக்கி கொண்டு போவதாக பேசியுள்ளார் தி.மு.க-வின் மூத்த ஆபாச பேச்சாளர்.

தமிழக பெண்களிடம் திண்டுக்கல் லியோனி பகீரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்., இல்லை என்றால் தமிழகம் முழுவதும் நாங்கள் போராட்டம் நடத்துவோம் என்று தமிழகம் முழுவதும் கடும் கண்டனங்கள் தி.மு.க-விற்கு எழுந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 


Share it if you like it