ஸ்டாலின் எவ்வழியோ, தி.மு.க எம்.பியும் அவ்வழியே, நெட்டிசன்கள் புகழாரம்..!

ஸ்டாலின் எவ்வழியோ, தி.மு.க எம்.பியும் அவ்வழியே, நெட்டிசன்கள் புகழாரம்..!

Share it if you like it

ஓட்டு எண்ணும் இயந்திரம் நம்ப தகுந்தது, இது எப்போதும் எனது பார்வையாகவே இருந்து வருகிறது. நான் அதற்கு ஆதரவாக நிற்கிறேன். அரசியல் கட்சிகள் மத்தியில் ஈ.வி.எம் இயந்திரம் மீது சந்தேகம் எழுந்துள்ளது, குறிப்பாக முடிவுகள் அவர்களுக்கு ஆதரவாக இல்லாதபோது. இதுவரை யாரும் தங்கள் கூற்றுக்களை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கவில்லை.

எந்தவொரு தேர்தலின் முடிவும் எதுவாக இருந்தாலும், ஈ.வி.எம் மீது பழிபோடுவதை நிறுத்த வேண்டிய நேரம் இது. எனது அனுபவத்தில், ஈ.வி.எம் அமைப்பு வலுவான, துல்லியமான மற்றும் நம்பகமானது ஆகும் என்று., கடந்த ஆண்டு தனது கருத்தை டுவிட்டரில் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். சிவகங்கை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம்.

வாக்கு எந்திரத்தில் தில்லுமுல்லு செய்ய முடியாது, அப்படி எந்த கட்சியாவது கருத்தினால். அதனை நிருபிக்க முடியுமா, என்று தேர்தல் ஆணையம் வெளிப்படையாக கருத்து கூறி இருந்தது. ஆனால் இன்று வரை எந்த ஒரு கட்சியும் அதற்கு முன்வரவில்லை என்பதே நிதர்சனம்.

இந்நிலையில் “ஜாமர் கருவியைப் பயன்படுத்தி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாக்க வேண்டும்!” என்று தலைமைத் தேர்தல் ஆணையருக்கு தி.மு.க எம்.பி டாக்டர் கலாநிதி வீராசாமி அவர்கள் கடிதம் எழுதி இருப்பது. துண்டு சீட்டு ஸ்டாலின் எவ்வழியோ, தி.மு.க எம்.பியும் அவ்வழியே, என்று நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.


Share it if you like it